கலிவெண்பாவில் லேவியராகமம்

ஏறுதனை எரிபலியாகக் கொடுத்தால் நியமம்

சந்திப்பு வீட்டில் இருந்திறை பேசினார்
சந்திப்பு வீட்டில் இறைவனை -சந்திக்க

வந்தால் பலியெடுத்து வந்திடட்டும் சந்திக்க
மந்தை களமாமே ஒன்றுயெடு - அந்த

எரிபலி யென்றால் பழுதில்லா ஆணை
எரிபலி செய்திட வந்து -எரிபலிமேல்

வைத்திடச் சொல்கை தலையேறு வைத்திட
வைத்திட்ட ஏறுதனைக் கொல்நிலத்தில் -தைத்திடச்

செய்திட்ட வன்பாவம் ஏறின்மேல் வந்திடும்
செய்திட்ட நன்பலியாம் ஏறுதனை -செய்பீடம்

கூடார ஊழியராம் ஆரோன் புதல்வருள்
நாடித் தெளிக்கட்டும் பார்ப்புதனை -நாடியவர்

கொன்ற விலங்கின் உதிரத்தை கூடாரம்
முன்நிற்கும் பீடத்தை சுற்றிலும் -நன்தெளித்து

தோலுரித்து பாகமாக துண்டித்து பீடத்தின்
மேலிட்டு சேர்ப்பர் தழல்இடுவர் -மேலே

நிணமதை ஊழியர் பீடம்மேல் வைத்து
நிணமெறிய நன்றாய் தழலும் -கணல்தர

கட்டை, நிணங்கால் குடலைக் கழுவிட்டு
கட்டைமேல் வைப்பர் நெருப்புதழல் -நட்டாண்

நறுமணமாய் மேலெழும்பும் நாற்றம் இறைவன்
நறுநாசி தன்னில் நுகர்ந்து -வெறுபாவம்

மன்னிப்பார் கூடார வாசி இறைவனார்
என்றென்றும் செய்வீர் இதை

1
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

ஆடுதனை எரிபலியாகக் கொடுத்தால் நியமம்

சீர்மக்கள் கையில் பணமில்லை ஏறிட
சீர்பலியாய் தந்திடட்டும் மேதனை -சீர்பலி

இல்லார்க்கும் நல்லாரே எம்மிறைவன் என்றென்றும்
வல்லார் வறியாரென் செய்யாரே -நல்மந்தை

ஆடென்றால் ஆணே பழுதில்லா நேர்பலி
ஆடாது வெள்ளாடோ செம்மறி -ஆடோ

எதுவாயின் தேர்ந்தெடுத்து சந்திப்புக் கூடம்
அதைக்கொணர்க நேராய் பலியாம் -அதையே

பலிபீடம் தன்னின் வடக்கில் பலியாய்
பலியிட்ட ஆட்டின் உதிரம் -நிலையாண்

புதல்வர் குருமார் தெளிப்பர் நிலைமேல்
புதல்வர் எரிப்பர் நிணம்சேர் -புதல்வர்

நிணத்தோடு காற்குடல்கள் நீர்கழுவி ஆங்கே
நிணமெல்லாம் தீவைத்து சேர்த்து -நிணமெரிக்க

மேலெழும் நாற்றத்தை மேலவர் தன்நாசி
கோலவர் செய்வார் முகர்ந்து

2
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

பறவையை பலியாகக் கொடுத்தால் நியமம்

ஆடும் கொடுக்க முடியா இனத்தாரோ
நாடிக் கொடுக்கட்டும் வான்புள்ளே -நாடுவீர்

இல்லார்க்கும் நல்லாரே எம்மிறைவன் என்றென்றும்
வல்லார் வறியாரென் செய்யாரே -இல்லார்

பறவை எரிபலி என்றால் தெரிவீர்
பறவையில் மாடப் புறாவோ -பறவையாம்

காட்டுப் புறாவோ தெரிவீர், தெரிந்தவர்
நாட்டார் குருவிடம் சேர்த்திட -நாட்டார்

தலைதனை கிள்ளி உதிரம் பலிக்கீழ்
தலைகுரு சிந்திட தீயால் -கொலைப்புள்

இறக்கை  இரண்டாக்கா சேரக் கிழித்து
இறக்கை  இரைப்பை அகற்று -சிறப்பில்

இரைப்பை இறக்கை அகற்றி குருமார்
எரிவர் எரிசாம்பல் கீழே -எரிப்பர்

எழும்புகை நாற்றம் தனையே இறைவன்
வழுவிலார் செய்வார் முகர்ந்து

3
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

உணவுப்படையலின் நெறிமுறை

ஒருவன் உணவை பலியாய்க் கொணர
திருமுன் கொணர்கவே மாவு -வருக்கம்

ஒருக்கையிட, மெல்லிய மாவுதனை ஆரோன்
திருக்கை எடுப்பர் சிறிது -குருமார்

எடுத்த சிறிதை எரிக்கட்டும் பீடம்
படையல் இதுவே நுகர்வார் -கடையோர்

வறியோர் தருமந்த காணிக்கை ஏற்பார்
இறைவன் மனமுவந்து ஆங்கு -சிறியோர்

படையல் எரித்த பிறகு குருக்கள்
படையலில் மீந்த உணவு -எடுத்தெரித்த

ஆரோன் தனையர் வசமாகும் நேராணின்
சேரவரின் தூய்ப்படை யல்உணவு -ஆரோனின்

மக்கள் வசமாகும் நேராய் தரவங்கே
மக்கள் அடைசெலுத்த வந்தாலே -தக்கதாய்

மெல்லிய மாவினில் எண்ணெயைச் சேர்த்திடுவிர்
அல்ல தடைபொரிப்பீர் சேர்த்தவரும் -நல்ல

புளிப்பில்லா அப்பம் அதிரசம் சேர்த்து
அளிப்பீர் குருவிடம் சேர்த்து -அளித்திட்ட

நல்லடைகள் பீடம்மேல் போட உடைக்கட்டும்
நல்லெண்ணெய் மேலிட்டு வைத்திடு -நல்லடை

தட்டையானச் சட்டியில் சுட்ட அடையென்றால்
சட்டியில் மெல்மாவு எண்ணெயிட்டு -சுட்டிடு

சட்டியில் எண்ணெய் பொரித்தெடுபீர் என்றாலே
சட்டியில் மாவெண்ணெய் சேர்த்தவர் -இட்டிட

எந்த உணவுப் பலியையும் ஆரோனின்
சொந்தம் வழியோர் சிறிதெடுத்து -அந்தப்

படையல் எரித்த பிறகு குருக்கை
படையலில் மீந்த உணவு -எடுத்தெரித்த

ஆரோன் தனையர் வசமாகும் நேராணின்
சேரவரின் தூய்ப்படை யல்எரித்த -நேரவர்

தானே நுகர்வார் பலிநாற்றம் ஊண்பலி
தானே நனிதூய் அறிவீரே -தேனும்

புளிப்பான தொன்றும் படைக்காதீர் சேர்த்து
புளிப்பு முதற்கனி தந்தால் -புளிப்பை

பலிபீடம் மேலே எரியாதீர் என்று
பலிகுறித்து சொன்னார் இறைவன் -பலியெதிலும்

உப்பாலே சாரம்சேர் தேவன் உடன்படிக்கை
அப்பலியில் எல்லாமே உப்பிட்டு -எப்பண்டம்

முன்கனிகள் தன்னை கொணர்ந்தால்நீர் தீச்சுட்டு
முன்பிரிப்பிர் வாட்டி உதிர்ந்திட -முன்னோடு

நாறு வருக்கம் தனைச்சேர்த்து தீயிடு
நாறெழும் அப்படையல் நன்கர்த்தர் -நாறுபுகை

நாசி நுகர்வார் இறைவனார், முன்கனிகள்
தேசத்தார் நேராய் படைத்து

4
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

சமாதான பலியின் முறை

நேர்ச்சை பலியோ அமைதிப் பலியென்றால்
நேர்மக்கள் ஆமேக்கள் மந்தையில் -நேர்பழுதில்

ஏறோ பசுவோ நலவெள்ளா டென்றால்தேர்
வேறாக்கி செய்வீர் பலிதன்னை -வேறான

அவ்விலங்கை சந்திப்புக் கூடாரம் முன்னராய்
அவ்விலங்கின் மேல்தலை கையிட்டு -அவ்விலங்கை

கொன்றிடுவீர் வாயிலில் நேர்பலியாய், ஆரோனின்
நன்புதல்வர் பார்ப்பை தெளித்திடுவர் -நன்பலி

பீடத்தை சுற்றிலும் பார்ப்பை தெளித்திட்டு
பீடத்தின் தீநெருப்பில் அவ்விலங்கை -பாடம்

கொழுப்பு குடல்கள் தகைச்சேர்த்து குண்டி
எழும்பெரிப்பர் கல்லீரல் சவ்வு -எழும்பிடும்

நாறு புகையே விழைப்பலி கர்த்தருக்கு
வேறே மறியாட்டில் தேர்ந்தாலே -வேறுமுறை

சொன்னார் இறைவனார் செய்முறை தன்னையே
என்னே முறையினது மாண்பு

5
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
செம்மறியின் நன்கிடாயோ பெண்ணாடோ நேர்தேர்வீர்
நும்வேறாய்ச் செய்வீர் பலிதன்னை -வேறான

அவ்விலங்கை சந்திப்புக் கூடாரம் முன்னராய்
அவ்விலங்கின் மேல்தலை கையிட்டு -அவ்விலங்கை

கொன்றிடுவீர் வாயிலில் நேர்பலியாய், ஆரோனின்
நன்புதல்வர் பார்ப்பை தெளித்திடுவர் -நன்பலி

பீடத்தை சுற்றிலும் பார்ப்பை தெளித்திட்டு
பீடத்தின் தீநெருப்பில் அவ்விலங்கை -பாடம்

கொழுப்பு குடல்கள் தகைச்சேர்த்து குண்டி
எழும்பெரிப்பீர் நாறு புகையை -விழைத்தகைத்து

கல்லீரல் மேல்சவ்வும் மூடு கொழுப்பையும்
நல்முதுகின் வால்முழுதும் சேர்த்தெரிப்பீர் -நல்பீடம்

நாறு புகையே விழைப்பலி கர்த்தருக்கு
தோறும் முறைதனை மக்களுக்கு -வேறுமுறை

சொன்னார் இறைவனார் செய்முறை தன்னையே
என்னே முறையினது மாண்பதுவே -சொன்னார்பின்

கேட்பீரே எந்நாளும் உண்ணீர் நிணங்கொழுப்பு
வீட்டாரும் பார்ப்பையும் உண்ணீரே -நாட்டார்

அறிந்திடச் சொல்வீர் இதுநியமம் என்றே
சிறந்துரைத்தார் கர்த்தர் இறை

6
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

பாவ நிவாரண பலி - ஆசரியன் செய்த பாவத்திற்கு நிவாரண பலி

அறியாமை யாலே இனத்தார் ஒருவன்
நெறிதவறி பாவம் புரிந்தால் -நெறியுடைத்த

காரணத்தால் தந்திடட்டும் வன்பலி செய்தோனே
சீராகச் சொன்னார் இறைவனார் -சீராணாம்

ஆசரியன் செய்தாலே செய்திடுவீர் இம்முறை
ஆசரியன் பாவம் திருக்கர்த்தர் -தேசத்தில்

மன்னிக்க கொண்டுவா போக்கிட ஓர்விலங்கு
வன்பலிச் செய்திட கூடாரம் -வன்னாய்

அருள்பொழிவு பெற்றவனாம் ஆசரியன் செய்தால்
திருக்கட் டளைமீறிப் பாவம் -திருமுன்னே

ஏறில் இளவயதாய் ஒன்றை நனிபலியாய்
ஏறைக் கொலைசெய் திடுவீரே -வேறான

ஏறின் தலைமேல் திருக்கையை வைத்திட்டு
ஏறைக் கொலைச்செய்து பார்ப்பெடுத்து -வேறறை

தூய்த்திரை முன்னராய் ஏழுமுறை தோய்த்தெளித்து,
தூய்ப்பீடக் கொம்பிலே பூசிட்டு -தூய்மகனே

பீடத்தின் கீழூற்றும் எஞ்சிய பார்ப்புதனை
பீடம்மேல் நல்லுறவு வன்பலிபோல் -பீடத்தின்

தீயால் எரித்திடுவீர், பின்னரங்கு எஞ்சியதை
தீயால் எரிப்பீர் வெளி

7
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

இசுரேல் இனத்தாரோ, தலைவனோ, பொதுமக்களோ அறியாமல் செய்த பாவத்திற்கு நிவாரண பலி

இசுரேல் இனத்தார் அறியாதே பாவம்
திசைதனில் செய்தால் புரிவீர் -இசுரேல்

சபையார் புரிபாவம் போக்கிட நேராண்
சபையா சரியனைப் போலே -சபைமுன்

இனத்தாரில் மூப்பர் தலைமேல் திருக்கை
இனஞ்செய்த பாவம் தனையே -இனம்விட்டுப்

போகவே ஏறின்மேல் வைத்திட்டு ஆசரியன்
ஏகமாய் செய்வான் பலிதனை -போக

இனத்தார் தலைவன் புரிந்த வினையென்
இனத்தார் தலைவன் வளத்தின் -இனக்கிடாய்

வெள்ளாட்டின் தந்து தலைமேல்தன் கையிட்டு
வெள்ளாட்டை வன்பலி செய்திடுவீர் -கொள்ளும்

இனமக்கள் யாதேனும் செய்த வினையென்
இனமக்கள் பெண்ணாடோ குட்டி -இனத்துள்

தலைமேலே கைவைத்து நல்லுறவு வன்போல்
தலையடிப்பான் ஆசரியன் ஆங்கு -தலைவர்க்கும்

சிற்றார்க்கும் மற்றார்க்கும் பாவநீக்கு வன்பலி
குற்றம்செய் தார்யார்க்கும் போகுமே -நற்றார்

இறைவனின் வீடது ஆசரிப்புக் கூடம்
முறைகளைச் சொன்னார் இறை

8
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

ஆணையை தெரிந்தும் சான்று சொல்லாததாலோ, தீட்டான விலங்கைத் தொட்டாலோ, பதறி ஆணையிட்டாலோ செய்ய வேண்டியவை

ஒருவன் செவியாலே ஆணையைக் கேட்டும்
தெரிவியாதே போனால் அதுவே -தெரிவியாத

காரணியால் பாவமாகும்; செய்கை சுமப்பானே
நேரத்தே சொல்லா ததால்கேள்மின் -காரணமீர்

தூயில்லா காட்டு விலங்கினை தொட்டாலோ
தூயில்லா நாட்டு விலங்கினை -தூயில்லா

தொட்டும் அறியேனே என்றாலும் தீட்டுகுற்றம்
தொட்டவனைச் சேரும் நிலத்தேகேள் -எட்டியும்

தூயின்மை மாக்களால் தீட்டோன் அறியாமல்
தூயினை கெட்டோனும் தீட்டுகுற்றம் -தூயில்லா

எவ்வித மாக்கள் தொடாதிரும் என்றவரும்
அவ்வாறே தந்தார் இறைவனார் -எவ்வாறு

வாய்ச்சொல்லால் ஆணை பதறி யிடுமெந்த
வாய்ச்சொல்லை கட்டுப் படுத்தோனோ -வாய்ச்சொல்

பதறி யிடுமந்த ஆணையினால் தீமை
இதநன்மை ஆயினும் தீது -இதனை

அறிக்கை யிடுவித்து அப்பாவம் போக்க
அறியாமல் செய்தேனே பாவம் -அறிந்தவனும்

தேர்ந்திட வெள்ளாடோ செம்மறியோ பெண்ணாட்டை
நேர்ந்தவன் போக்க பலியிட்டு -சேர்கிடாய்

ஆடு பலியிட ஆகாதோன் கொண்டுவர
காடுவாழ் புள்ளாம் புறாவினையோ -தேடி

புறாக்குஞ்சோ சோடியாய் சேர்த்து குருக்கை
புறாயிடச் சொல்வீர் பலியாய் -புறாவில்

ஒருபுறா வின்தலை ஆசரியன் கிள்ளி
இரத்தம் வடியவிட்டு பின்னை -இரண்டாக்கா

பார்ப்பில் சிறிதெடுத்து பீடத்தின் கோடதில்
பார்ப்பினைப் பூசட்டும் ஆங்குக்கேள் -நேர்மகன்

ஆசரியன் மற்ற தலைக்கிள்ளி பாவத்தின்
வீசை எரிபலியாய்ச் செய்வித்து  -ஆசரியன்

செய்திடட்டும் பாவந்தீர் வன்பலியே நேராக
மெய்யாரும் மன்னிப்பார் கோன்கேள்மின் -செய்யில்

புறாவும் எடுத்துவர கைப்பணமில் மாவை
புறாவிற்கு ஈடாகக் கொண்டு -புறாயீடே

இம்மாவென் ஆசரியன் கையிட ஆசரியன்
அம்மா சிறிதெரிப்பான் சேர்த்தங்கு -செம்மாவாம்

மாவிலே மீந்தது ஆசரியன் கைச்சேரும்
மாவெரித்த காரணத்தால் மன்னிப்பார் -மாவேளும்

செய்தோனின் பாவம் தனைமறந்து மன்னிப்பார்
செய்வீர் இதுவே முறையென்றார் -செய்முறையில்

குற்றந்தீர் வன்பாவம் நீக்கும் பலியதில்
சிற்றளவும் எண்ணெய் இடாதிரும் -சிற்றளவும்

நாறு வருக்கம் இடாதிரும் ஏனென்றால்
நாறுபுகை வேண்டா மிதில்

9
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

கர்த்தரின் கட்டளையை மீறியோ, விலக்கான செய்கைகளையோச் செய்தால் செலுத்த வேண்டிய குற்ற நிவாரண பலி

தூய்க்கர்த்தர் கட்டளையில் தூய்நேமம் ஏதேனும்
தூய்விட்டு பாவம் அறியாதே -வேய்வினை

செய்திட்டால் தூய்நட்டம் கொண்டுவந்து மேலைந்தில்
செய்யொரு பங்கைக் கொடுத்திட்டு -செய்தோன்

வினைப்பாவம் தீர்க்க கிடயொன்றை கொண்டு
வினைப்பாவம் போக்க குருமார் -நினைவாக

போக்கிடச் செய்பலியால் பாவம்ந்தீர் போவானே
தேக்க வினைபாவம் தீர்ந்திட்டு -வாக்கில்

விலக்கெனக் கர்த்தர் உரைத்ததை செய்து
விலக்கினால் தீட்டு அறியா -விலக்கைச்செய்

குற்றம் புரிந்தோனே ஆதலால் செய்யட்டும்
குற்றந்தீர் வன்பலி தான்செய்து -குற்றத்திற்

உன்சொல் படியே கிடாயாடு தேர்ந்திட்டு
வன்பாவம் செய்ததை போக்கிட -வன்பலி

ஆசரியன் செய்திட்டால் பாவம் நினைவிடுத்து
தேசத்தில் வாழ நலம்

10
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

ஒப்புவித்த பொருளை கவர்தல், மாறாட்டம் செய்தல், ஏமாற்றி பறித்தல் இச்செய்கைகளைச் செய்தால் செய்ய வேண்டியவை

அயலான் பொருளைக் கவர்ந்தோ பறித்தோ
அயலான் எதிராக அல்ல -நியனார்

எதிராகச் செய்தான் அதனை அதனால்
எதிர்ச்செய்தோன் தந்து திருப்பு -அதல்லாது

காணாப் பொருளை திரும்பப் பெறினுமவன்
காணாப் பொருளை இலையேயான் -காணவில்லை

என்றாணை யிட்டாலே கர்த்தர் எதிராக
வன்னாகச் செய்தான் வழக்கதனால் -வன்செய்

கவர்ச்செல்வந் தன்னிலே ஐந்திலொருப் பங்கை
கவர்ச்செல்வங் கூட்டித் திருப்பி -அவன்செய்த

வன்செயலுக் காக நியமம் முறைதனை
நன்கர்த்தர் சொன்னார் உரைத்தாரே -வன்பாவம்

குற்றப் பழியின் பலியாக சொல்படி
குற்றமில்லா ஆட்டு கிடாய்கொணர்ந்து -குற்றபலி

ஆசரியன் கையில் கொடுத்து செலுத்திட
ஆசரியன் செய்வான் சரி

11
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் சொன்ன நியமங்கள்

பின்னும் திருஇறைவன் மோசேக்கு சொன்னது
உன்தமையன் ஆரோன் அவன்வழியோர் -நன்நேமம்

என்றும் எரிபலி வன்பலி பீடம்மேல்
நன்றாய் யெரியவேண்டும் கேள்மின்னே -வன்தீ

இராமுதல் ஞாவரும் வேளை வரையில்
இராமுழுதும் நின்றெரிய வேண்டும் -நெருப்பு

குருமார்கள் மேலே சணல்நூலால் ஆடை
தரித்து நிணங்கள் எரித்து -பிரியா

சணல்நூலால் ஆடை தரித்து எரித்த
நிணங்களின் சாம்பலை பீடம் -திணையருகே

கொட்டி, உடைதனை மாற்றியவன் சாம்பலை
கொட்டட்டும் ஊரின் வெளிச்சென்று -விட்ட

குருமார் நிணஞ்சாம்பல் ஊரின் வெளியே
திருக்கொட்ட, தூயிடம் கண்டு -குருக்கொட்ட

பீடம்மேல் தீஎரிந்து கொண்டிருக்க வேண்டும்கே
பீடம் நிணமெரிப்பர் சேர்த்து

12
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

அமைதி நல்லுறவு பலிக்கான ஆரோன் செய்ய வேண்டிய நியமம்

எரிபலியின் பின்நல் லுறவின் அமைதி
எரிபலி செய்ய வரிசை -வரிசையாய்

வைத்திட்டு தீநெருப்பு வைத்து எரித்திட
வைத்திடுவீர் தீஅணை யாதிருக்க -வைத்து

திருமுன் பலிபீடம் தன்னின் எதிராய்
திருப்புதல்வர் செய்ய உணவின் -திருப்படையல்

மாவெடுத்து கைப்பிடி பீடம்மேல் தீயெரிக்க
மாவொடு வர்க்கமதைச் சேர்த்திட்டு -மாவின்

நினைவாய் எரித்த உணவுப் படையல்
நினைப்பீர் மிகத்தூய்மை அஃது -அனைத்தும்

திருமுன் புளிப்பில்லா அப்பம் தகைச்சேர்
திருஉண்பர் தூயின் வெளியில் -திருவட்டம்

ஆரோன் வழியாரில் ஆண்கள் புசிக்கலாம்
ஆரோன் தலைமுறைகள் யாவருக்கும் -சீராய்

எரிபலிமேல் கைவைப்போர் தூயராவர் யாவர்
எரிபலி நேமம் பகன்று

13
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

ஆரோனின் அருள்பொழிவு நாளில் அவனுக்காகச் செய்ய வேண்டிய உணவுப் பலி

திருக்கர்த்தர் மோசே யிடம்பகன்றார் நேமம்
திருமகன் ஆரோன், வழியோர் -திருப்பொழிவு

நாளதில் எப்பா அளவிலே மாவெடுத்து
வேளையிரு பத்திலொரு பங்கெடுத்து -நாளுமே

காலையும் மாலையும் தீயெரித்து மெல்மாவு
காலையில் பத்திலொருப் பாதியும் -மாலையில்

பத்திலொருப் பாதியும் எந்நாளும் ஊண்படையல்
அத்துனை என்றார் இறைவனார் -அத்திணைச்

சுட்டிடுவீர் தட்டையான சட்டியில் எண்ணெயிட்டு
சுட்டதை தூன்டுகளாய் பிட்டுபிரிச் -சுட்டெரிப்பீர்

ஊண்பலியை நாறுமிக்க நாசி நுகர்ந்திட
ஊண்பலி ஆரோன் வழியார்கு -காண்கேளீர்

ஆசரியன் ஊண்படையல் தீயெரிப்பீர் மொத்தமாக
ஆசரியன் ஊண்படையல் உண்ணாதீர் -ஆசரிய

ஊழியம்செய் ஆரோன் புதல்வர் கடைப்பிடிக்க
வேழாஅர் சொன்ன விதி

14
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

பாவநிவாரண பலி, குற்ற நிவாரண பலிக்கான ஆரோன் புதல்வர்க்கு கர்த்தர் கொடுத்த நியமம்

பாவப் பலியதை உண்ணவேண்டும் தூய்முன்னே
பாவப் பலிமிகத் தூயென்றார் -பாவந்தீர்

குற்றப் பலியதும் உண்ணவேண்டும் தூய்முன்னே
குற்ற பலியிதும் தூய்தானே -சுற்றம்

எரிபலி கொல்லும் இடத்தே கொலைசெய்
தெரிவீர் பலியது தூய்ஊன் -சரியாண்கள்

தூயறையில் நின்று புசிக்க, பலிமேலே
தூயதாகும் பட்டாலே கேள்மின்னே -தூயோன்

துணிமேல் அதின்பார்ப்பு பட்டால் வெளுப்பீர்
துணியதை தூயறையில் தானே -நிணஞ்செய்த

மண்பாண்டம் வேறாய் உடைத்தெரிவீர் அன்றேநீர்
திண்பண்டம் செய்த கலமென்றால் -பண்டம்செய்

செப்புகலம் என்றாலே தூயறையில் நீர்விட்டு
செப்புகலம் தன்னைக் கழுவிடுவீர் -செப்புள்ளே

நன்றாகத் தேய்த்து கலம்கழுவி விட்டிடுவீர்
என்றார் இறைவன் விதியென்றார் -அன்றளித்த

பாவந்தீர் எப்பலியின் பார்ப்பில் சிறிதளவு
பாவந்தீர் தூயறையுள் வந்ததோ -பாவந்தீர்

அப்பலியை யாரும் புசியாதீர் என்றென்றும்
அப்பலியை தீயில் எரித்து

15
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

குற்ற நிவாரண, பாவ நிவாரண பலிகள் குறித்த மேலும் சில நியமங்கள்

குற்றந்தீர் வன்பலியின் நேமம் எதுவென்றால்
குற்றந்தீர் வன்பலியை கொன்றிடுவீர் -சுற்றத்தில்

அங்கே எரிபலி கொல்லுமிடம் தன்னில்தான்
அங்கு உதிரம் எடுத்தந்த -மங்கா

பலிபீடம் சுற்றித் தெளித்திடட்டும் பார்ப்பு
பலிபீடம் மேலே கொழுப்பை -பலியெரித்து

வால்குடல்கள் குண்டிக் கொழுப்போடு கல்லீரல்
மேல்சவ்வு சேர்த்தெரிக்கச் சொல்லிடு -மேல்வீடின்

தூயறையில் ஆசரியர் ஆண்மக்கள் உண்ணட்டும்
தூயாக்கும் குற்றபலி, பாவபலி -தூயவை

நேமம் ஒருநேமம், பாவந்தீர் ஆசரியன்
நேமம் அதுசேரும் ஆங்குணர் -நேமம்

எரிபலியின் தோலும் சமைத்த படையல்
எரிபடாத இவ்விரண்டும் சேரும் -சரியாசன்

செய்தவனை, எண்ணெய் பிசைந்த பிசையாத
மெய்மா பலியது பங்கு

16
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

சமாதானபலிகளின் வகைகளும் அதன் நியமங்களும்

நன்றிக்காய் நல்லுறவு வன்பலி கொண்டுவந்தால்
நன்றிபலி கூட புளிப்பில்லா -நன்னப்பம்

எண்ணெய் பிசைந்து சமைத்திட்டு, சீரடை
எண்ணெய் சமைத்துப்பின் பூசுவீர் -பண்டம்

அதுசேர் புளித்தமா நன்னப்பம் சேர்த்து
இதனோடு நன்றிபலிக் கென்ற -சிதைவிலங்கு

கொண்டு வரச்சொல் இனத்தாரை என்பகன்றார்
கொண்டு வரும்முறையை நேர்அவர் -கொண்ட

படையல் முறையே வகைக்கொன்றாய் கையில்
படைக்கட்டும் ஏறெடுத்து பண்டம் -படைத்தெளித்த

ஆசரியன் பங்கது; நன்றிபலி தன்னையே
ஆசரியர் அன்றே புசித்துவிட -ஆசரியர்

உண்பீரே நன்றிபலி நாள்விடியல் வைக்காது
உண்ணலாம் உற்சாக மேன்பலி -உண்பீர்

இரண்டாம் திருநாள் பொருத்தனை செய்த
வரைமூன்றில் மிச்சம் எரித்து -சரியில்லை

நல்லுறவு பண்டத்தை மூன்றில் புசித்தாலே
நல்லுறவு கெட்டுப்போம் செய்தோனின் -நல்லுறவு

பண்டம் கறைத்தீட்டில் பட்டால் எரிப்பீர்நீர்
பண்டமது மற்றதை உண்பீரே -உண்ணுணவு

தீட்டுள்ளோன் நல்லுறவு பண்டத்தை உட்கொண்டால்
தீட்டினால் செய்தானே தீங்குச்செய் -தீட்டோடு

நல்லுறவு பண்டத்தை உட்கொண்ட காரணத்தால்
வல்லாகப் போவான் அறுத்துப்போய் -நல்லில்லை

ஊன்கொழுப்பு தானே இறந்ததும், பீறுண்ட
ஊன்கொழுப்பும் வேலைக்குத் தந்திடுவீர் -ஊன்கொழுப்பை

மேன்இசுரேல் கேள்மின் கொழுப்பெதுவும் ஆமேயின்
ஊன்புசிக்கா விட்டிடும் மாண்புக்கேள் -ஊன்தன்

எரிபலி யென்வந்த மாக்கள் கொழுப்பை
சரியில்லா உண்போர் அறுத்து -வரைதன்னில்

புள்மாக்கள் பார்ப்பதை உண்ணாதீர், பார்ப்புதனை
அள்ளுண்ணும் மாந்தர் அறுத்துப்போய் -புள்மாக்கள்

நல்லுறவு வன்பலியை இட்டிட வந்திடுவோன்
நல்லுறவு வன்பலியை தன்கையால் - நல்லதாய்

கொண்டுவந்து மார்பும் கொழுப்பும் அசைவாட்ட
கொண்டுகொடு ஆசரி யன்கையில் -பண்டத்தின்

கொண்டக் கொழுப்பை பலிபீடம் மேலெரித்து
கொண்டுகொடு மார்பினை ஆசரியன் -கண்டெடுத்து

கொண்டுகொடு முன்தொடை இன்வலது ஏறெடுக்க
கொண்டிடுவான் ஆசரியன் பங்கது -மண்ணிலே

ஐந்து பலிகளை சீனாயில் நல்லிறைவன்
ஈந்தார் இசுரேலர் பின்பற்ற -ஐந்துபலி

நல்லெரி, ஊண்படையல், பாவபலி, குற்றந்தீர்
நல்லுறவும் நன்நிலை ஐந்து

17
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

ஆரோனையும் அவன் புதல்வரையும் திருநிலைப்படுத்தி ஆடை அணிவித்தல்

ஆரோன், வழியார் திருவின்நல் ஊழியம்
சேரவர்ச் செய்ய நிலைப்பலி -நேராணாம்

மோசே புரிவாயே சொன்னார் இறைவனார்
மோசே செவிகேட்க நன்றதை -மோசேயும்

கர்த்தர்சொல் கேட்ட திருமகன் சேரழைத்தான்
கர்த்தர்சொல் கேட்டு படியவன் -கர்த்தரின்

கட்டளை நல்படியே காளையும் ஈராடும்
நட்டான் கொணர்ந்தனன் ஆங்குதான் -கட்டளை

கர்த்தர் உரைத்தார்: இனத்தார் அனைவரும்
கர்த்தரின் வீடுமுன் கூடிடச்செய் -கர்த்தர்

உரைத்த படியே இனத்தார் அனைவர்
விரைச்சேர்த்தான் நேராண் சிறந்து -விரைந்த

இனத்தரை நோக்கி: இறைவனார் செய்ய
இனத்தாரே கேள்மின் இதுவே -இனத்தாரே

ஆரோன், வழியார் நிலைசெய் குருக்களாக
நேராண் நிலைசெய்வித் தான்கேள்மின் -நேராணும்

ஆரோன், வழியாரை நீரால் குளிப்பாட்டி
நேராண் நலமான ஆடைகள் -ஆரோன்

அணிய இடைக்கச்சை ஏபோத்து கச்சை
அணிவித்தான் மார்பதக்கம் சேர்த்து -அணிவித்த

மார்பதக்கம் மேலாக ஊரீம்தும் மீமைபோட்டு
சேர்தலையில் தங்கத்தால் தூய்பட்டம் -நேர்போட்டு

சேர்தலையில் பாகை அணிவித்து நேராணும்
சேர்வைத்தான் ஆடை வியனாக -நேர்வேள்

திருக்குளியல் செய்ய விதஞ்செய்த எண்ணெய்
திருக்கூடம் தன்பலி பீடம் -திருக்கூட

மற்ற பணிமூட்டு எல்லாமே எண்ணெயால்
அற்றது நீக்கித்தூய் செய்தங்கு -நற்றாணாம்

ஆரோன் தலைமேல் சிறிதாக எண்ணெயூற்றி
நேராணாய் செய்தான்தூய் ஆரோனின் -சேராண்கள்

ஆடை அணிவித்து கச்சையிடைக் குல்லாக்கள்
ஆடை அணிவித்தான் நேர்

18
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

ஆரோன் அவன் புதல்வருக்காக இடப்பட்ட பலிகள்

நேர்பலியாம் ஏறினைக் பாவந்தீர் கொண்டுவந்து
சேர்மக்கள் ஆரோனும் கைவைக்க -பாவந்தீர்

ஏறினை நேமம் புரிந்தான் சரியாக
ஏறுமிச்சம் சுட்டான் வெளியிலே -மாறா

எரிபலியாய் ஆட்டினை நேமம் படியே
எரிபலிச் செய்திட்டான் நேராண் -எரித்தனன்

ஆடு இறைவன் நுகரவே நாறுபுகை
தேடி பழிதில்லா ஆடுதனை -வீடில்

திருநிலை நல்பலியாம் ஆட்டுக் கிடாயை
திருமக்கள் ஆரோன் கரன்வைத் -திருமுன்னே

கொன்றிட்டான் பார்ப்பு, வலப்பெருக் கைக்காலின்
நன்விரல்மேல் காதும் வலதினில் -நன்பூசி

அப்பம்சேர் ஆரோன் வழியார்கை சேர்கொடுத்து
அப்பமும் முன்னந் தொடையையும் -தப்பாது

ஏறெடுத்து ஊன்அசைத்து சுட்டெரித்தான் பீடம்மேல்
வேறான மார்க்கண்டம் சேர்ந்தது -வேறான

மார்க்கண்டம் தன்னை அசைத்தனன் மோசேயும்
மார்க்கண்டம் சேர்ந்தது மோசேக்கு -நேர்மகன்

ஆட்டினது பார்ப்பில் தெளித்தனன் ஆடைமேல்
நாட்டாரும் ஆயினர் தூய்மக்கள் -ஆட்டின்

நிணமாம் நிலைப்பலியின் மிச்சம் வழியார்
நிணத்தை நிலைவ்வீட்டின் வாயில் -அணலிட்டு

வேவித்து உண்ணுவீர் உண்டப்பின் சேர்த்திட்டு
வேவுணவை போட்டு எரித்திட்டு -சேவை

நிலைநாட்கள் ஏழு நிறைவேற நீரே
நிலைத்திரும் கூடாரம் தன்னில் -நிலைநேமம்

சாகா உயிர்த்திருக்கச் செய்வீரே ஏழுநாள்;
ஆக இதுபோல்செய் வீர்மக்காள் -ஏகமாய்

கீழ்படிந்தார் ஆரோன் வழிமக்கள் மோசேசொல்
கீழ்படிந்து எல்லா விதபலியும் -வேழ்கர்த்தர்

சொன்ன படியே புரிந்தனர் நன்மக்கள்
அன்னாரின் சொல்தனைக் கேட்டு

19
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

ஆரோனின் எரிபலி, பாவபலியும் மக்களின் நல்லுறவு பலியும்

ஏழுநாள் போனபின் எட்டாம்நாள் மோசேயும்
வேழார்வாழ் கூடாரம் சேர்ந்தனன் -ஏழுநாள்

ஆங்கே தரித்திருந்த ஆரோன், புதல்வரை
பாங்காகச் சொன்னான் மகனன்று -தீங்குதீர்

தேர்ந்திடு பாவபலி சேர்த்து எரிபலி
தேர்ந்திட்டு நேமம் படிபலி -சார்மக்கள்

தேர்ந்திடும் பாவபலி நல்லுறவின் வன்பலியென்
சேர்த்திடுவாய் பீடம்மேல் இட்டிடு -சேர்த்தோன்

இனத்தாரே வாரும் உறவுப் பலியை
வினைதீர பீடம்மேல் சேர்க்க -இனத்தாரே

இன்றே வியன்காண்பீர் மேன்மை இறைவனின்
நன்றாக, மோசே உரைத்தவன் -நல்சொல்லின்

நேமம் படியே பலியிட்டான் தன்பலியில்
நேமம் தவறாது ஊன்மீதம் -சீமை

வெளியில் எரித்து, எரிபலி எல்லாம்
அளித்தான் பலியை மகனும் -அளித்தான்

இனத்தாரின் நல்லுறவு தன்னின் கொழுப்பை
வினையெடுத்து பீடம் எரித்து -இனத்தார்

விலங்கினது மார்கண்டம் தன்னை அசைத்து
நிலத்தில் புரிந்தான் மகனும் -நிலத்தில்

இவைபுரிந்த பின்வெளி வந்து இனத்தார்
அவைமக்கள் ஆசீர் வதித்து -அவையோரின்

கண்காண கர்த்தரின் சந்நிதி யின்கணல்
மண்பீடம் ஊனெரித்துப் போட்டு

20
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

நாதாப் அபியு அந்நிய தீ எடுத்து வந்து மரித்தலும், ஆரோனும் புதல்வரும் பாவ பலியை உண்ணாது விடுதலும்

புதல்வராம் ஆரோனின் நாதாப் அபியு
விதம்செய்தார் வேறே வருக்கம் -விதஞ்சேர்த்து

நாறுபுகை கொண்டுவந்தார் சந்நிதி வேறாக
ஆறாத தீயைக் கொணர்ந்ததும் -நாறுபுகை

வேறுதீயை ஏற்காதே தீவந்து சுட்டெரிக்க
வேறு கொணர்ந்த இருவரும் -பீறிப்போய்

சாக, இறைவன் பகன்ற இறைத்தூய்மை
சாகாத வண்ணம் நிலைப்பீரே -ஏக

திருநிலை எண்ணெயும் மேலிருக்க கூடம்
திருவிட்டு போகா திருமே -இருவர்

திருமக்கள் எஞ்சியோர் சொன்னான் இறைவன்
திருமுன்னே ஊழியர் சேர்த்தொன் -திருவவன்

ஆரோன் சிறுதகப்பன் பிள்ளை இருவரை
நேராண் அழைப்பித்து பீறுடல் -சீராய்

வெளிச்சென்று மண்ணில் புதைத்து விடுமே
வெளியில் புதைத்தார் அவர்கள் -அளித்தவர்

ஆரோனை கர்த்தர் அழைப்பித்து சொன்னாரே
ஆரோனே நீயும் புதல்வரும்- நேரான

ஊழியர் கூடாரத் தின்னுள்ளே வந்திடுமுன்
வேழாரே உண்ணீரே கள்தனை -கீழாமே

கள்ளெதுவும் உண்ணா திருமே திருமக்காள்
கள்ளுண்டு உள்வாரீர் வந்தாலே -கள்ளாலே

செத்திடுவீர், தூய்தூயில் வேறாகக் காட்டிட
அத்தாணே செய்யா திரும்மென்றார் -அத்தவரே

மக்களின் பாவபலி உண்பீர் எனமோசே
மக்கள் எலெயாசார் இத்தாமார் -தக்கதாய்

ஊன்புசிக்கச் சொல்ல, விலங்கினது ஊன்தேட
ஊன்பீடம் மேலெரியக் கண்டதிர்ந்து -ஊன்அது

மாதூய் பலியது ஏனோ புசியாமல்
மாதூய் பலியதை சேர்த்தெரித்தீர் -மாதூய்

கெடநீர் இருந்தீர் சரியோ சினத்தால்
கடுகடுத்தான் மோசே திருவாண் -சிடுசிடுத்தோன்

ஆரோன் அவையாரின் நன்பலி யிட்டநாளில்
சேராத தீயாலே மாண்டாரே -சேரார்

பலியெடுத்து நானும் புசிப்பது நன்றோ
இலையான் புசியேனே ஊன்தான் -நிலைச்சொல்லை

மோசே பகர்ச்சொல் தனைக்கேட் டமைந்தனன்
வீசை புரிபாவம் ஆனதால் -தேசன்

புசியாமல் விட்ட தறிந்ததும் ஆற்றி
அசையாது நின்றான் தமன்

21
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

உண்ணத் தகுந்த மிருகங்கள் மற்றும் உண்ணத் தகாத மிருகங்கள்

கர்த்தர் தமரிருவர் நோக்கிப் பகன்றாரே
கர்த்தர் மிகத்தூயர் ஆதலால் -கர்த்தரை

போன்றே மிகத்தூய ராக இருந்திடுவீர்
சான்றோராய் இந்த இனம்வாழ -ஆன்றோர்

இனத்தாரே கேட்பீர் நினைவாக உண்பீர்
இனத்தாரே நேமம் சிறப்பே -அனைத்து

விரிகுளம்பும் தன்னூண் அசைபோடும் யாவும்
சரியான தென்பதால் உண்பீர் -வரையிலே

உண்டே விரிகுளம்பு தன்னூண் அசைபோடா
மண்ணுயிர் தன்னை தவிர்ப்பீரே -மண்ணில்

உடல்தன்னைக் கொண்டு தவழ்ந்தூறும் யாவும்
உடல்மேலே பட்டாலே தீட்டு -உடலிலே

உள்ளங்கால் தன்னை தரையூன்றி மண்நடக்கும்
எள்ளளவும் உண்ணாதீர்; விண்பறக்கும் -புள்ளினத்தில்

வான்கழுகும், வல்லூறும், காகங்கள் கோட்டானும்
கோன்புசியீர் சொன்னார் சிறந்தவர் -வான்கீழே

நீர்தன்னில் வாழும் செதில்சிறகு உள்ளவை
நீர்புசிக்க ஏற்றவை என்பகன்று -நீர்தன்னில்

வாழும் வழுவான தொன்றை புசிக்காதீர்
வேழார் உரைத்தார் விதியென -வாழ்விற்கு

பற்பல நேமம் கொடுத்தார் இறைவனார்
சற்றே புசித்து இனமவர் -அற்றாக

போகாமல் நேராக வாழ்ந்திட, என்றென்றும்
ஏகமாய் பற்றிடுவீர் சீர்நீரே -வேகாதே

செத்தது மேல்வீழ்ந்தால் தீட்டது, பாண்டமுள்
செத்தது வீழ்ந்தால் உடைத்திடு -செத்தது

நீரிலென்றால் கொட்டிடு, செத்தது நல்மணிமேல்
சீரது போகாது காண்பீரே -சீரில்லா

செத்தது நீர்மிகு நற்கிணறென் தீட்டாகா
செத்தது நீர்பட்ட நல்மணியும் -செத்ததுபோல்

ஊர்ந்துச்செல் எப்பிராணி கொள்க விதியிதுவே
நேராய்ப் பகன்றார் விதிதனை -நேர்சொல்லி

இங்ஙனம் பற்பல நல்விதிகள் இட்டாரே
தங்கினத்தார் பின்பற்ற நல்கர்த்தர் -அங்கினத்தார்

தீட்டெது நேரெது சொன்னார் இருதமர்
கேட்கப் பகன்றார் இறை

22
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

கர்ப்பவதி பிள்ளைப் பெற்றபின் செய்ய வேண்டிய நியமம்

கர்ப்பம் தரித்து மகன்பெற்றால் ஏழுநாள்
கர்ப்பம் விடுத்துப் பிறந்தோனை -கர்த்தர்

இடுவித்த கட்டளை முன்தோல் எடுத்து
அடுத்தநாள் தன்னிலே எட்டு -அடுத்தவள்

பின்னர் இருப்பாளே முப்பத்து மூன்றுநாள்
பின்சென்று பெண்ணவள் நற்பலி -நன்கொடுக்க

கர்ப்பப் பிறப்பால் பெறுந்தீட்டு விட்டிடும்
கர்த்தர் பகன்றார் விதிதன்னை -கர்த்தரீந்த

கர்ப்பப் பிறப்பு மகளென் இருமடங்கு
கர்ப்பம் பிறந்த மகளுக்காய் -கர்ப்பந்தாய்

முப்பத்து மூன்றில் இருமடங்கு நாட்களே
தப்பா திருக்கவே தாயவள் -அப்பாலே

பின்னர் அவள்செல்ல நேரவர் கூடாரம்
பின்சென்று பெண்ணவள் நற்பலி -நன்கொடுக்க

கர்ப்பப் பிறப்பால் பெறுந்தீட்டு விட்டிடும்
கர்த்தர் பகன்றார் விதியிது -கர்த்தருக்காய்

ஆடும் புறாவும் எரிபலி நல்லுறவு
ஆடு கொடுக்க பணமில்லாள் -ஆடு

பதிலாய் இருபுறா தந்திடச் சொல்வீர்
அதிலோர் எரிநல் லுறவு

23
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

மனிதரில் தொழுநோய் வந்தால் குருவிடம் சேர்த்தல்

இறைவனார் மோசே தகைத்தமன் ஆரோன்
நிறைச்சொல் சொறிசிரங்கு வந்தால் -குறைநோய்

சிறங்கோ தொழுநோயோ ஐயந்தீர்ச் செய்வீர்
அறனார் மகனிடம் சேர்ப்பீர் -அறனார்

சிரங்கிருக்கும் மேல்தோல் குழிந்து உரோமம்
சிரங்கிலே வெண்மை யெனக்காண் -சிரங்கது

தீர்ப்பர் தொழுநோய் மனிதனும் தீட்டாவான்
தீர்ப்பது சொல்வான் குருவவர் -தீர்ப்பு

குழியாது மேல்முடி வெண்மையாய் மாறா
அழிநோய் இதுவென ஐயம் -வழிச்செல்லா

ஈரேழு நாள்வைத்து பார்க்க குறைந்திருப்பின்
ஈரேழு நாள்பின் விடுத்திட -தீரா

விடுத்தோனை மீண்டும் தொழுப்பற்ற ஆங்கே
விடுத்தோனை ஆரோன் மகனார் -விடுத்தேன்

எனினும் தொழுநோய் வரைப்பற்ற போவாய்
இனிமேல் குறைதீட்டே நீயென் -நனிதீர்

உடலின் முழுவதும் வெண்மை பரவி
உடலே முழுவெண்மை என்றால் -உடலில்

தொழுப்போலே வெண்மை அடைந்தவன் தீட்டில்
வழிச்செல்ல சொல்வார் குருமார் -தொழுப்புண்

திறந்தபுண் ஆங்கே இருந்தாலே தீட்டு
சிறைவக்க சொல்வார் குருவும் -திறந்தபுண்

மூடி தொழுவில்லாப் போனால் குருமாரை
நாடி புரிவீரே தீர்ப்பதை -நாடி

குருமாரும் சோதித்து செய்வாரே தீர்ப்பு
சிரங்கோ உடலின் கறையாய் -வரைக்கட்டி

என்றாலும் நேமம் குருபார்த்து தீர்த்திடட்டும்
என்றார் இறைவன் சிறந்தவர் -என்றாலும்

கட்டி இருந்த இடத்திலே புள்ளியாய்
சுட்ட இருந்தால் அதுதொழு -கட்டி

இருந்த இடத்தில் வெறும்வெண்மை என்றால்
சிரங்கின் தழும்பது தீர்த்து -திருமக்கள்

தீயால் உடலது புண்ணாய் தொழுப்போலே
வேயாள் குருதன்னை பார்த்திடு -தீயால்

உருதொழு நோயை குருபார்த்து தீர்க்க
சிரங்கா தொழுநோயா என்று -சிரங்கால்

தலைதாடை புண்ணாக ஆங்கே தொழுப்போல்
தலைவர் குருதன்னை பார்க்க -தலைவன்

உருதொழு நோயை குருபார்த்து தீர்ப்பான்
சிரங்கா தொழுநோயா என்று

24
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

ஆடை, பாவு, பஞ்சு, ஆட்டு மயிர், தோல் இவற்றில் படரும் நோய் பற்றிய நேமம்

ஆடையோ பாவோ மயிரது ஆடினதோ
ஆடைமேல் நோயால் நிறமது -ஆடையின்

பச்சையோ இல்லை சிவப்பாக மாறினால்
அச்சத்தால் சேர்ப்பீர் குருவிடம் -அச்சாடை

நோயதனை சோதிக்க ஏழுநாள் வைத்திருப்பர்
நோயும் படரா நிலைக்கண்டால் -நோயிலை

என்றே குருதீர்ப்பார், நோயது மேல்படர
அன்றே எரிப்பீர் பகுத்திட்டு -நன்றென

நோயிலை தீர்த்தப்பின் அவ்வாடை ஏழுநாள்
நோயதின் பாகம் கழுவிட்டு -நோயது

தேயா திருப்பின் அதுதீட்டு என்தீர்ப்பார்
நோயாடை தீயெரிப் பீர்நன்றே -நோயும்

குறைநோய் பரவாதே தேய்ந்தால் கழுவி
குறைநோய் அதுநீங்க தீட்டில் -கறைநீங்கி

மக்கள் எடுத்துப் பயன்செய்ய சொல்வாரே
மக்களிடை தேர்ந்த குரு

25
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

தொழுநோய் குணமானோன் செய்ய வேண்டிய நேமம்

தொழுநோய் குணமானோன் சொல்ல குருவும்
தொழுநோய் குணமோ இலையோ -அழையூர்

வெளிவந்து பார்த்திட, நோய்போய் குணமென்
களிப்பலி கொண்டுவரச் சொல்லு -களிப்பலி

ஈராய்க் குருவிகள் கேதுருக் கட்டையும்
சீராய் சிவப்புநூல் ஈசோப்பு -நேராண்

இடங்கொண்டு வாவெனச் சொல்ல தொழவே
இடந்தன்னில் நேராணைச் சேர்ந்து -குடமெடுத்து

ஈரில் ஒருகுருவி பார்ப்பிடிக்க கொன்றவன்
ஈரில் மறுகுருவி நூல்மேலே -நேராணும்

தோய்த்து தொழுநோயோன் மேலேழு சொட்டிட்டு
தூய்மையாக தாடி சிரைத்தவன் -தூய்நிறை

வீட்டின் வெளித்தங்க ஏழுநாள் பின்னராய்
வீட்டுள் வரட்டும் சிரைத்தவனே -நாட்டிலே

எட்டாம்நாள் கொண்டே பழுதற்ற ஆடொன்றும்
நட்டார்முன் ஈராடு ஆணாடு -குட்டிகளை

கொண்டுவந்து கூடவே ஆறுபடி மாவும்சேர்க்
கொண்டுவந்து ஆசரியன் சேர்த்திட -கொண்டுவந்த

நன்பொருட்கள் தன்னையே பாவபலி மற்றுமாய்
நன்னசை வாட்டுபலி செய்வித்து -நன்றே

அமைதி பலியும் இடவும் குருமார்
அமைதலாய் நோய்கறை நீக்க -சுமைபாவ

பார்ப்பதில் சிற்றளவு காதின் வலதுமடல்
பார்ப்பை வலதுபெருக் கைவிரல் -பார்ப்பூசி

எண்ணெய் இடக்கை சிறிதெடுத்து தன்வலக்கை
எண்ணெய் தனைதோய்த்து ஆசரியன் -எண்ணெயை

ஏழுமுறை ஆண்டவர்முன் சொட்டிப்பின் பார்ப்பின்மேல்
வாழுமவன் பார்ப்பினது மேல்பூசி -வேழாணும்

வாழுமவன் மேற்றலையில் எண்ணெயை பூசுவான்
வாழாசன் முப்பலியால் தூய்மையே -வாழவன்

தேசத்தான் வன்பலிக்கு கொண்டுவரா ஏழையோ
ஆசனிடம் ஈராய்ப் புறா.

26
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

வீட்டில் தொழுநோய் வந்தால் செய்ய வேண்டிய நேமம்

வீட்டிலே ஆண்டவர் நோய்வரச் செய்தாலே
வீட்டுமுதல் ஆசரியன் வீடுவந்து -வீட்டைபார்

என்சொல்ல, ஆசரியன் வீடுசேர் முன்னரே
நன்பொருட்கள் வீட்டுவெளி வைத்திட -நன்னாசன்

வீட்டின் சுவர்சிவப்பு பச்சைக் குழிக்கறையென்
வீட்டை அடைத்திடனும் ஏழுநாள், -வீட்டையவன்

எட்டாம்நாள் பார்வையிட, நோய்படரா வீடுதூய்
எட்டாம்நாள் நோய்பரவி கண்டாலே -நட்டாணும்

நோய்க்கற்கள் பேர்த்தெடுத்து வீட்டினது சுற்றத்தின்
வேய்மணல் தன்னை செதுக்கிட -தூய்மைசெய

ஊர்வெளியே போடுமின்னே என்றுரைத்து கற்கொண்டு
சேர்ப்பூசி பின்னுமாய் நோய்ப்பட்டால் -சேர்வீட்டை

மட்டம் இடித்திட்டு பாழ்ப்பொருளை ஊர்வெளி
இட்டிடக் கட்டளை இட்டிட -கட்டிடம்

நோய்நீங்கின் நோய்நீக்கம் தூய்செய்ய போயந்த
நோய்வீட்டாள் ஆசரியன் கையிலே -தூய்செய்ய

ஈராய்க் குருவிகள் கேதுருக் கட்டையும்
சீராய் சிவப்புநூல் ஈசோப்பு -நேராண்

இடங்கொண்டு வாவெனச் சொல்ல தொழவே
இடந்தன்னில் நேராணைச் சேர்ந்து -குடமெடுத்து

ஈரில் ஒருகுருவி பார்ப்பிடிக்க கொன்றவன்
ஈரில் மறுகுருவி நூல்மேலே -நேரான

நேராணும் பார்ப்பதை தோய்த்தெளி நோய்வீடு
சீரே; கறைவீடு உள்ளடைக்க -சேரார்

கறைவீட்டுள் யாரும்; அடைவீட்டுள் சென்றோன்
கறையாவான் மாலைவரை; வீட்டில் -உறங்கியோன்

ஊனுன்டோன் நீரால் வெளுக்கட்டும் மேலாடை
தானே சொறிசிரங்கு நோய்வந்தால் -மேனியில்

செய்திட நேமம், பகன்றாரே தேவனும்
மெய்யார் இருதமர் கேட்டு

27
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

வெட்டைநோய், புண்ணால் வரும் நீர்போக்கு தீட்டு குறித்த நேமம்

இறைவன் இருதமர் நோக்கிப் பகன்றார்
நிறைதேச மக்களிடம் சொல்வீர் -குறையாய்

உடலில் திரவம் வடியும் எவனும்
விடுவீரே தீட்டு முடிவு -விடும்வரை

அவ்வாள் தனியே படுத்திடச் சொல்வீரே
அவ்வாள் தொடுமேதும் தீட்டாகும் -அவ்வாள்

படுக்கையும் தீட்டே; படுக்கை தொடுவோன்
படுக்கையை தொட்டதால் தீட்டு -விடும்திரவம்

நின்றாலும் புண்ணாலே தீட்டே அவன்செல்ல
அன்றாட வண்டியும் தீட்டேகாண் -நின்றவனும்

துப்ப ஒருவன்மேல் பட்டாலும் பட்டவன்
அப்போதே ஆவானே தீட்டவனும் -அப்படியாள்

தொட்டவன் தீட்டு கழிந்திட நீராடி
தொட்டதால் மாலை வரைதீட்டே -தொட்டபொருள்

எல்லாமே தீட்டு; மனிதனும் தீட்டகல
வல்லார் தொழப்பலி செய்திடட்டும் -நல்ல

உறுநீரால் தன்னுடல் நீராடி பின்னர்
நறுதெய்வம் தன்னைத் தொழவே -சிறுபுறாவோ

காட்டுப் புறாவோ இரண்டாகக் கொண்டுவந்து
நாட்டு குருக்களைச் சேர்ந்திட -நாட்டவன்

தந்ததில் ஒன்று எரிபலியாம் மற்றது
தந்த அமைதிக் கிடுவித்து -அந்தப்

படியே பகன்றார் இறைவனார் வெட்ட
படிந்தோன் குறித்தவர் தீட்டு

28
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

விந்து வெளியேற்றம், மாதவிடாய், மகளிரின் உதிரப்போக்கு குறித்த நேமம்

விந்து வெளியேற தீட்டாவான் ஆங்கவனும்
விந்து படயிருந்த பெண்ணுமே -விந்துபட்ட

காரணத்தால் தீட்டாவாள்; மேலாடை தோய்த்துப்பின்
காரணம் மாலை வரையிலே -சேராப்பெண்

மாத விலக்காய் மகளிர் இருக்கட்டும்
மாதத்தில் ஏழுநாள்; காலமதில் -மாதர்

படுக்கையும் தீட்டே; படுக்கை தொடுவோன்
படுக்கையை தொட்டதால் தீட்டு -படுத்தவளை

சேர்ந்தாலே ஆண்மகனும் தீட்டாவான் மாலைவரை
சேர்ந்திட்ட காரணத்தால் ஏழுநாள் -சேர்த்தீட்டே

ஆண்படுக்கை தீட்டாகும்; தொட்ட பொருளெல்லாம்
வீண்தீட்டு ஆகிடும் நேமமிது -காண்பெண்ணின்

நாள்பின்னும் பார்ப்புவந்தால் நிற்கும் வரைத்தீட்டு
நாள்நின்ற நாள்பின்னே ஏழெண்ணி -நாள்விட்டு

ஈராய் புறாக்கொடுக்க ஆசரியன் செய்திடுவான்
சீராய் பலியிரண்டே இட்டிட -நேராக

வாழ்க்கைதனை வாழச்சொல் மக்களை; கூடாரம்
வாழ்தேசத் தில்தானே உள்ளதே; -வாழ்கர்த்தர்

நேமம் கொடுத்துரைத்தார் மோசேயும் ஆரோனும்
நேமம் செவிகேட்டார் ஆங்கு

29
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

ஆரோனின் இரு குமாரர் இறந்தபோது ஆரோனுக்கு செய்யக் கட்டளையிட்டவை

வெளித்தீ கொணர்ந்தே மரித்தார் இருவர்
வெளியார் வராதே இருக்க -அளிகர்த்தர்

நேமம் தமனாம் இவன்மோசே தந்திட்டார்
நேமம் இதுவே பகன்றவர் -நேமமாம்

மாதூய் தலத்தில் இரக்க இருக்கைமேல்
மாதூய் இறைவன் இருப்பாரே -மாதூய்

தலத்திலே எந்நேரம் சொல்லாய் வரவே
தலத்திலே வந்தால் மரித்து -தலமுன்

ஒருகாளை ஆரோனும் தன்குடும்ப பாவம்
திருமுன் அறிக்கை புரிவான் -ஒருமே

எரிபலியாய் கொண்டுவர ஆரோன் குளித்தே
திருமுன்னர் வந்திடச் சொல்வாய் -திருமுன்

முழுதும் சணலால் இடையாடை பாகை
வழுவில்லா தூயாடை ஈதே -வழுக்காக

ஈராடு கொண்டிடச்சொல் மற்றும் எரிபலிக்கு
சீரான வெள்ளைக் கிடாய்செலுத்த -சீரான

ஈராட்டை சீட்டுபோட்டு ஈராட்டில் ஓராடு
சீராக்கும் வன்பலியே மற்றாடோ -நேரில்லோர்

பாவமேந்தி விட்டிடச்சொல் ஆளில் வனத்திலே
பாவபலி செய்தப்பின் ஆங்குத்தான் -பாவ

பலியிட்ட காளையின் பார்ப்புதனை மாதூய்
நலமாக ஏழுமுறை சொட்ட -பலிசெய்யும்

வேளையில் வேறெவரும் கூடாரம் உள்செல்லீர்
காளை பலிப்பின் நுழையச்சொல் -வேளையில்

காளை பலிப்பின்னே வர்க்கம் புகையெழுப்பி
ஆளை வரச்சொல்வாய் மாதூயுள் -ஆளை

இரண்டுக்கை வர்க்கம் புகைப்போட்டு ஆங்கே
திருமுன்னர் வந்திடச் சொல்வாய் -திருப்பலி

காளையின் பார்ப்புதனை பீடத்தின் கொம்புமேல்
ஆளவனை பூசச்சொல்; ஆடுபலி -வேளையிலே

மக்களின் பாவம் அறிக்கைசெய்தே பின்னராய்
தக்க எரிபலி செய்தவனும் -மக்கள்காண்

காளை பலிபின்னே ஆடை அவிழ்த்தவன்
ஆளவன் நீராடி கண்கவர் -கோளாடை

மேலுடுத்தி வந்திடச்சொல் மக்களும் கண்டிட
காலத்தே செய்வீர் பலிதன்னை -சீல

பலிபின்னே காளையும் ஆட்டின் நிணமும்
நலமக்கள் வாழ்நகரம் விட்டு -பலிநிணம்

எல்லாமே சேர்த்தெரிக்கச் சொல்வாய் எரித்தோனும்
நல்குளியல் செய்திடச் சொல்வாயே -அல்லாது

நேமித்த ஆளை விடச்சொல்வாய் ஆடதை
நேமித்தோன் கொண்டு வனம்விட -நேமித்தோன்

நல்குளியல் செய்தே வரச்சொல்வாய் உள்நகரில்
நல்நேமம் தேவன் கொடுத்தவர் -நல்நேமம்

மக்களுக்கு ஏழாம் திருமாதம் பத்தாம்நாள்
தக்கதாய் இப்படியே செய்ச்சொல்வாய் -மக்கள்

இதனை தலைமுறை தோறும் புரிய
அதுவே பெருஓய்வு நாளே -இதனாலே

மக்கள் அனைவரும் வேலை விடுத்தன்று
மக்கள் மனதை குறுக்கியே -மக்களும்

சொல்படியே ஓய்ந்திருக்க கட்டளை தந்திடு;
வல்லார் இறைவன் உரைத்து

30
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

பலிசெலுத்தினல் ஆசரிப்பு கூடாரம் கொண்டுவர நியமம். அந்நிய தேவர்களுக்கு பலி செலுத்தா திருக்க எச்சரிக்கை

இறைவனார் மோசேயை நோக்கிப் பகன்றார்
இறைமக்கள் எல்லாரும் கேட்க -இறைவாக்கு

சொல்லிடு, மாடோ மறியாடோ வெள்ளாடோ
கொல்பாவம் மேல்சுமறும் ஆதலால் -சொல்வாய்

நகரினுள்ளோ அல்வெளியோ கொன்றால் இரத்தம்
நகரினுள்ளோ அல்வெளியோ சிந்த -பகைப்பழி

மேல்சுமரும், அம்மனிதன் போவான் அறுப்புண்டு
கோல்பகன்றார் கொல்லாதீர் வீணாக -கோல்பின்

ஒருவேளை மாக்கள் பலியானால் ஆங்கே
திருமுன்னர் கொண்டுவரச் சொல்வாய் -திருஆசன்

பார்பதனை பீடம்மேல் சொட்டித் தெளித்தப்பின்
பார்க்கொழுப்பை பீடம் எரித்திடட்டும் -சேர்சொல்லாய்

சோரமாய் வேறே கறையுருவம் யாருக்கும்
கோரபலி செய்யா திருமின்னே -சீராக

வாழ்ந்திட ஈதே தலைமுறை தோருமாய்
வாழ்நேமம் தேவன் பகன்று

31
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

தகனபலி வேறெங்கும் செலுத்தக் கூடாத நியமம், உதிரம் உண்ணாதீர் என்ற நேமம், தானாய் இறந்ததை உண்டால் தீட்டு என்ற நேமம்

தகனபலி ஏதேனும் செய்தாலே மக்கள்
தகனபலி கொண்டுவராப் போனால் -இகத்தில்

இனத்தினின்று போவான் அறுப்புண்டு வேறாய்
மனமுவந்து இட்டான் பலியே -அனைவரும்

தேசத்தில் வாழ்மக்கள் யாருமே பார்ப்புசியீர்
தேசத்தில் வாழ்இனத்தார், வேறினத்தார் -வீசிப்

புசித்தால் எதிராய் முகம்திருப்பி போவேன்
புசித்தோர் அறுப்புண் டழிவீர் -திசையில்

நிணத்தின் உயிரது பார்ப்பிலே ஆதல்
நிணத்தினோடு பார்ப்பதை உண்ணீர் -நிணத்தின்

உதிரம் கொடுத்தேன்யான் கட்டளையாய் பீடம்
உதிரம் தெளிக்கவே மீட்பு -அதுதானே

ஆத்துமா செய்பாவம் நீக்க உதிரமே
ஆத்தும பாவம் எடுக்கிறது -ஆத்தும

நேசர் பகன்றாரே நல்நேமம் மக்களின்
நேசத்தால் மீட்பது பார்ப்பதுவே -தேசவெளி

வேட்டை மிருகம் அனைத்தின் உதிரமும்
வேட்டை புசிப்போர் உதிரத்தை -வேட்டை

இடத்திலே சிந்தி மணலாலே மூடி
கடந்தப்பின் உண்பீர் நிணத்தை -கடுமையால்

தானாய் இறந்ததோ பீறுண்ட மாக்களோ
ஈனன் புசித்தாலே மாலைவரை -ஈனன்

புசித்ததால் தீட்டாவான்; நீர்க்குளியல் பின்னர்
புசித்தோனை விட்டகலும் தீட்டு -புசித்தோனோ

நீர்குளியல் செய்யாமல் ஆடைதனைத் தோய்க்காமல்
நேர்நியதி ஆகாதே அவ்வாளும் -நேர்நியதி

செய்யாத காரணத்தால் தன்மேல் பழிசுமப்பான்
செய்யாதோன் என்றார் இறை

32
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

நெருக்க இனத்தாரோடு கலவி கூடாது என்ற நியமம்

இறைவனார் மோசே யிடம்பகன்றார் நீபோய்
நிறைமக்கள் தன்னிடம் போய்ச்சொல் –இறைவன்

நிறைக்கர்த்தர் யானே; எகிப்தினின்று கானான்
நிறைத்தேசம் செல்வழி செய்தேன் –குறையாம்

எகிப்திலே செய்துவந்த வன்செய்கை செய்யீர்
வகைக்கானான் வாழினம் செய்யும் –தகைச்செய்கை

செய்யாதீர் கீழ்படிந்து தேவனெந்தன் கோட்பாடு
செய்து நடப்பீர் இனத்தாரே –செய்த்தந்த

கட்டளைகள் பின்பற்றும் எவ்வாளும் நன்றாகக்
கட்டளைகள் பின்பற்ற வாழ்ப்பிழைப்பான் –கட்டளைகள்

கோட்பாடு தந்திட்ட தேவனாம் யான்கர்த்தர்
மீட்பர் பகன்றார் உரைத்தவரும் –நாட்டில்

நெருக்கம் இனத்திலே சேராய் கலவி
நெருக்கமே தாய்தந்தை நல்லார் –நெருக்கமே

தந்தைவழி வந்த சகோதரர் ஆண்பெண்கள்
தந்தை உடன்பிறந்தோர் விட்டிடுவீர் –தந்தைப்போல்

தாய்வழி வந்தோர் நெருக்கமாம் கூடாதே
தாய்வழி வந்தோர்க் கலவியும் –சேய்மக்கள்

சோதரர் வந்தோர்க் கலவியும் வேண்டாமே
சோதரி பெற்றோர் விடுத்திடுவீர் –ஆதலால்

பெற்றோர் சகோதர ஆண்பெண் துணையையுன்
நற்றாள் கலவாதீர்; நீயுலகில் –பெற்றபிள்ளை

யாரும் கலவாதீர்; பிள்ளை மருமக்கள்
யாரும் கலவாதீர் இங்குத்தான் –சேராயே

தாய்மகள் ஒன்றாய்க் கலவீர்; நிலத்தினிலே
சேய்தாய் கலத்தல் விடுவீரே –சேய்தாய்

இனத்தில் நெருக்கம் விடுப்பீர் கலவி
இனமே நெருக்கம் விடுத்து –நனியுன்

மனையாள் உயிரோ டிருக்க தமையாள்
மனைவியாய் கொள்ளாதீர் துன்பம் –மனைவிக்கு

ஏற்படு மாதலால் விட்டிடுவீர் நல்லாளின்
ஆற்றாமை கூடா துலகிலே –ஆற்றாது

பெண்ணின் விலக்கான நாட்களில் சேராதீர்
மண்ணின் மிருகத்தைச் சேராதீர் –மண்ணின்

இனத்தார் புரிந்தார் இவையெல்லாம் ஆங்கே
இனத்தாரை கக்குமே நாடு –இனத்தாரே

ஆணோடு ஆண்கலவீர் கானான் இனத்தார்கள்
மாணாச்செய் செய்கைகள் பின்பற்றீர் –வீணாக

பின்பற்றி னாலே செயல்களை கேட்பேன்நான்
நன்கர்த்தர் யானே உணர்

33
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

இசுரவேலர் பின்பற்ற வேண்டிய வேறுசில நியமங்கள்

அறுவடைக் காலம் அறுவடை நாளில்
சிறியோர் அறுக்க விடுமின் –அறுகடை

மூலை சிதறல் எடுக்காதீர் சிற்றாட்கள்
மூலை அறுக்கவே விட்டுவிடு –சோலைப்

பயிரும் திராட்சைக் கொடியது எல்லாம்
உயிர்பிழைக்க விட்டிடும் சிற்றாள் –பயணியர்

போக்கர் வழிசெல்வோர் தன்னின் பசிநீங்க
ஆக்க நிறைதேவன் கூற்றுச்சொல் –போக்கமாய்

அண்டை இருப்போர்க்கு தீமைப் புரியாதீர்
மண்ணிலே வேலைக்கு கூலியை –கொண்டுவாழ்

மக்களுக்கு அன்றாடம் தந்திடுமின் அஃதன்றோ
மக்களின் வாழ்நிலை காண்பீரே – மக்கள்

செவிடர் செவிக்கேளார் என்பதால் வாய்ச்சொல்
செவிக்கேளார் தீச்சொல் உரைக்கா –அவைமக்காள்

கண்தெரியோன் காலிடற முன்னே தடைக்கல்லை
மண்ணிலே வைத்தல் விடுத்திடுவீர் –மண்ணிலே

கோள்சொல்லி வன்னாய்த் திரியாதீர் மக்களே
கோள்சொன்னால் மாற்றானின் வாழ்வது –கோள்தன்னால்

போகுமே வீணாய்; இனத்தார்கேள் சொல்வாயே
போகாதீர் கோள்சொல்லிப் பொய்யாக –ஆகவே

சுற்றார் அயலார் எவரும் மனதாலே
அற்றாக எண்ணாதீர் மக்களே –சுற்றார்

தவறென்றால் சொல்தவறை; அற்றாள் தவறை
தவறினால் உன்மேல் பழியாம் –தவறென்

பழிக்குப் பழிவேண்டாம் உம்மினத்துள் ஆங்கே
வழிவந்த நற்பிறனை நீயும் –அழியாத

அன்புகூறு; நான்கர்த்தர் ஆதலால் பின்பற்றி
அன்புகூறு என்பகன்றார் நேர்கர்த்தர் –என்றும்

இருவகை மாக்கள் கலவீர் பெருக்க
இருவித்து சேர்த்து விதைக்கா –திருமே

இருவகை நூலாலே ஆடைநெய்யீர் என்றார்
திருக்கர்த்தர் நேமம் சிறந்து –திருக்காய்

நியமித்த பெண்ணடிமை ஆளவன் சேர்ந்தால்
நயமில்லை என்றே குருமார் –கயவனும்

பாவபலி ஆட்டுக் கிடாய்கொண்டு தந்திட
பாவபலி செய்வான் குருஆசன் –பாவநிறை

கானானைச் சேர்ந்து மரம்நட்டு அற்கனிகள்
கானானில் வந்திட விட்டிடும் –கானானின்

ஆண்டு நுனித்தோலில் அற்கனிகள் மூன்றாக
ஆண்டது நான்கில் இறைக்காக –ஆண்டவர்க்கு

நான்கா வதுஆண்டில் தந்திடுவீர் நல்லிறைக்கு
தேன்சுவை நற்கனிகள் எல்லாமே –தேன்சுவை

நற்கனிகள் உண்ணலாம் ஐந்தா வதுஆண்டில்
நற்கர்த்தர் சொன்னார் சிறந்தங்கு – அற்றாய்க்

குறிகேட்க போகா திருப்பீரே; கள்ளம்
நெறியில்லா மாயங்கள் வேண்டாம் –தறிகெட்டு

மேல்முடியை வெட்டாதீர் வீண்சடங்காய்; தாடியும்
சால்முடியே வெட்டாதீர் என்றுமே – மேல்சேர்

அடையாளம் செய்திட உம்முடலில் பச்சை
இடுவியாதீர்; செத்தோர் நினைவில் –அடையாள

ஏதும் அணியாதீர் நான்கர்த்தர் என்பகன்றார்
வேதம் உரைத்தார் இறைவனார் – மாது

மகளவளைப் பேணுதல் நல்லொழுக்கம்; பேணா
மகளவள் வேசியானால் நாடே –மகளிரால்

கெட்டுப்போம்; ஆதலால் பேணு மகளிரை
கெட்டுப்போ காதபடி நாடதும் –கெட்டதே

மந்திரம் செய்வோர் அகற்றிடுவீர் போகாதீர்
மந்திரம் செய்வோர் குறிகேட்க –எந்நாளும்

நான்கர்த்தர் என்சொல் மறவாதீர் சொன்னாரே
மேன்மை மிகுந்தவர் நல்லாரும் –மேன்மை

நரைமுடி நல்லார்முன் நீயெழும்பச் செய்வாய்
நரையாள் பணிந்து சரியாய் –நரைமுகன்

நன்றாக சேவித்தல் நன்றாமே அஞ்சிச்செய்
நன்கர்த்தர் யானே உணர்வாயே –அன்றி

அயல்நாட்டு மக்கள் பயணித்தால் நீவிர்
அயலானென் கூறி கெடுதல் –அயலார்க்கு

எண்ணாதீர்; மக்காள் அயலாய் எகிப்தென்னும்
மண்ணில் உழன்றீர் இனத்தாரே – மண்ணில்

திருநாட்டில் அந்நியர் வாழ விரும்ப
திருநாட்டில் அந்நியரை தேச –திருமக்கள்

போலே மதித்திடுவீர்; தன்னைத்தான் அன்புகூறுப்
போலே புரிவீர்நல் அன்புத்தான் –சீலாய்

எடைக்கல் நிறைக்கல் அளவுச்செய் ஏதும்
கடைதன்னில் சீராக வைப்பீர் –எடைக்கல்

எதிலும் களவுச்செய் யாதீர் இறைவன்
அதனைப் பகன்றார் சிறந்து

34
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

பாலியல் வன்புணர்விற்கு தண்டனை

பிறன்மனையாள் வன்னாய் உறவுகொண்டால் சாவர்
அறமிதுவே கேள்மின் தகாதே -பிறன்மனை

நோக்கல் அதனாலே சாகடிப்பீர் சேர்த்திருவர்
தேக்காதே தேசமும் கக்கிடும் -நோக்கியே

தந்தை மனையாளைச் சேர்தல் கொடும்பாவம்
அந்தபடி சேர்ந்தால் கொலைசெய்வீர் -அந்திருவர்

தந்தையை அம்மணம் செய்ததற்கு ஒப்பாமே
அந்தபடி செய்வீர் கொலையைத்தான் -பந்தம்

மருமகளை சேர்ந்துப் புணர்ந்தால் இருவர்
திருச்சொல்லைக் கேட்காத தாலே -இருவரைக்

கொன்றிடுவீர் மோசமான பாவமதால் சாவிற்கு
வன்செய்தோர் மீதே பழியாகும் -வன்னாக

ஓரின வன்புணர்வோர் கொன்றிடுவீர் பாவமே
ஓரினப் வன்புணர்வு; சேதமும் -சேராப்

பழியது கொல்வோர்மேல், ஓரினச் சேர்க்கை
பழியது தத்தமதின் மேல்தான் -பழிதானே

தாயோடு சேர்த்து மகளைப் புணர்தலும்
தீயவை தானே அதனாலே -தீயவைச்

செய்தோராம் மூவரும் கொன்றிடுவீர் கொல்வதால்
வெய்ப்பாவம் போகுமே நாடதும் -செய்தோரை

ஆண்பெண் எவரேனும் வன்னாய் புணர்ந்தலை
மாண்பற்று மாக்களோடுச் செய்தாலே -மாண்பதை

விட்டு விலகியதால் கொன்றிடுவீர் அக்கொலைக்கு
விட்ட பழிவிலகி யோர்மேலே -நட்டமாய்ச்

சொல்விலகி சோதரன் சோதரியை நாட்டிலே
அல்லாய் மணம்புரிந்தால் தண்டனை -அல்லார்க்கு

தந்திட வேண்டுமே; மாதர் விலக்கின்கால்
சிந்தப் புணர்ந்தால் பழியாகும் -அந்தபடி

சோதரன் கட்டிய மாதை புணர்ந்தால்காண்
சோதரனின் அம்மணத்திற் கீடாமே -சோதரன்

கட்டிய மாதைப் புணர்வோனும் அம்மாதும்
திட்டமாய் தண்டியும் சேர்த்து

35
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

ஆசரியர் கடைபிடிக்க வேண்டிய சில நியமங்கள்

மக்களுள் யாரேனும் சாக, திருவாசன்
தக்கான் பிணம்தொடான் ஏனென்றால் -தக்கான்

நிறையோன் திருவிற்காய்; ஆசரியன் சொந்த
உறவென்றால் மட்டும் தொடலாம் -உறவது

தந்தைதாய் சோதரன் தத்தமது மக்களும்
தந்தை வழிப்பிறப்பு கன்னியும் -அந்தபடி

ஆசரியன் தொட்டங்கு தீட்டும் சரியாமே
தேசத்தில் இவ்வகை யாய்ச்செய்வீர் -தேசத்தின்

ஆசரியன் தன்தாடி மேல்மயிர் ஏதுமே
தாசன் மழிக்கா திருக்கச்சொல் -வேசியின்

வன்புணர்வும் கற்பிழந்த பெண்மணமும் கூடாதே
நன்றவனாம் ஆசரியன் தூய்மகனே -நன்றாக

நேர்சேவை செய்பவன்; அப்பமும் வன்பலியும்
நேர்மகன் தன்னை உடலாலும் -சேர்மனதால்

தூயின்மை கூடாது; தூயவர் சேவைச்செய்
வேயமாய் போகா திருக்கச்சொல் -தூயவர்

தூய்கெடுக்க ஆசன் மகளவள் வேசியானால்
தூய்கெடுத்த காரணத்தால் தீயிடுவீர் -தூய்கெட்டு

தூயறையுள் வந்திடும் மேலாசன் தீட்டாகா
தூயனாய் காத்திடச் சொல்லிடு -ஆயன்

தலைமை முடிதரித்த மேலாசன் நாளும்
தலைமேலே தூயெண்ணை தானே -தலைவனின்

பெற்றோர் இறந்தாலும் தீட்டாக தொட்டிடாமல்
நற்றான் இருக்கட்டும் சீராக -அற்றாண்

தலைமை முடிதரித்த ஆசரியன் என்றும்
தலைமை முடிதரித்த தாலே -தலையுடை

தன்னை கிழிக்கலாகா சொல்வாய் செவிகேட்டு
என்றுமவன் கீழ்ப்படிய நேர்மகன் -நன்றில்

உடலிலே ஊனமென்றால் ஆசன் இனத்தான்
இடலாகா எப்பலியும் கேளாய் -இடத்துள்

திரைப்பின்னே போகாது தூய்பலி தன்னை
இருந்துண்ணச் சொல்வாய் மகனும் -திரைமுன்னே

வன்பலியோ தூபமோ ஏறெடுக்க லாகாது
என்றென்றும் தூயறைக்குள் வந்திடான் -அன்றியும்

மாதூய் பலிதனில் உண்ணலாம் அம்மாந்தன்
வேதவர் இட்டார் சிறந்தன்று -வேதவர்சொல்

இந்நேமம் கேட்டறிந்து சொன்னான் திருமோசே
சந்ததியர் ஆரோனும் கேட்டு

36
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
இனத்தார் இசுரேல் கொடுக்கும் பொருளை
இனத்தலை ஆரோன் புதல்வர் -அனைவர்

செவிகேட்கச் சொல்நேமம்; கர்த்தர் இறையான்
இவையே பகன்றார் இறைவன் -செவிகேள்

தலைமுறையார் ஆரோனில் யாரேனும் தீட்டாய்
தலைமுறையார் செய்திட்டால் நேமம் -மலையது

வன்பாவம் ஆதலால் மக்களே தீட்டோடு
வன்பலியோ ஏனை விடுத்திடுவீர் -நன்றில்

தொழுநோய் எவனில் உளதோ திருவூண்
வழுவிப் புசிக்கலாகா கேளீர் -அழியாதே

அந்நியர், வேலையாள் ஊண்தன்னை உண்ணவே
அந்தப் படிக்கொடா தீர்மக்காள் -மந்தம்

அறியாமல் யாரேனும் உண்டாலே உண்ட
அறிந்ததும் ஐந்திலோர் பங்கு -செறிவாக

சேர்த்திடச் சொல்வீரே உண்டவனை ஆலயத்தில்
நேர்கர்த்தர் நேமம் பகன்றவர் -நேராண்

குலத்தினள் கைம்பெண்ணோ தள்ளுண்டோ வீட்டில்
நிலைத்தவள் பிள்ளையில் சேர்ந்தால் -குலத்தினள்

தூயூண் புசிக்கலாம்; ஆசரியன் கொள்வேலை
தூயூண் புசிக்கலாம் நன்றாமே -வேயாள்

குலத்தினள் வேறாள் மணம்புரிந்துப் போனால்
குலம்விட்டுப் போனதால் ஆகா -குலத்தினள்

தூயூண் புசிக்கவே; நேமமிது என்றாரே
தூயவர் கர்த்தர் இறைவனும் -தூயர்

இறையெனக்கு காணிக்கை அந்நியர் சேர்ந்து
சிறப்பாக தந்திட வந்தால் -சிறப்பாய்

பழுதில்லா நேராய் மிருகம் தனையே
வழுவாதே வாங்கிடு வீர்நேர் -அழிய

வழுவிப் பழுதை படைத்தால் குலத்தார்
வழுவது காணிக்கை ஏற்கா -பழுதை

கொடுத்தீரே தூயவர்க்காய்; மக்காள் சிறப்பே
கொடுக்காது விட்டு டுவீரே -அடுத்து,

பிறந்தப்பின் ஏழுநாள் தாயிடம் விட்டு
பிறந்தமே தாய்விட் டெடுத்துச் -சிறப்பாய்

பலியிடலாம் எட்டாம்நாள்; ஆனாலும் தாயைப்
பலியிடாதீர் குட்டியோடுச் சேர்த்து -பலிநாளில்

தாய்சேய் ஒருநாளில் சேர்த்துப் பலியிடாதீர்
தூய்கர்த்தர் உங்களை தூய்செய்ய -தூய்மக்கள்

விட்டிடச் செய்தேன்நான் தூயராய் வாழ்ந்திட
விட்டிடாதீர் தூய்மை தனைமக்காள் -நட்டார்

மனமுவந்து காணிக்கை கொண்டுவாரும் மக்காள்
மனமுவந்து நன்றிப் பலிகள் -மனதில்கொள்

தூயரென் நாமத்தை தூய்க்கேடு ஆக்காதீர்
தூயவர் சொல்படி வாழ்ந்து

37
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

பாசுகா, புளிப்பில்லா அப்பப் பண்டிகை

இறைவனார் மோசே யிடம்பகன்றார் சொல்வாய்
இறைமக்கள் கொண்டாடச் சொல்வாய் -நிறைவிழா

செய்வீரே வேலை நிறைநாட்கள் ஆறுநாள்;
செய்யாதே ஏழாம்நாள் ஓய்ந்திருப்பீர் -செய்வீரே

பாசுகா அப்பம் புளிப்பில்லா கொண்டாடு
தேசத்தில்; சேர்த்த முதற்கனிகள் -வீசி

அசைவாட்டும் பண்டிகை; பெந்தகொசுத் கூட
இசைக்கூடம் எக்காளம் தானே -மிசைசேர்ந்தே

ஆண்டின் முதற்றிங்கள் நாளாம் பதினான்கில்
ஆண்டுதோறும் பாசுகா நல்விழா -வேண்டுமே

மக்காள் பதினைந்தில் சேர்ந்துநீர் கொண்டாடும்
தக்க புளிப்பில்லா ஊன்தனை -மக்காள்

புளிப்பில்லா ஊன்புசிக்கும் அந்நாட்கள் ஏழு
புளிப்பில்லா ஊன்நாளாம் ஒன்றில் -களிக்கூடும்

மக்கள் திருச்சபையில் சேர்ந்தே; களிநாளில்
மக்காள் இருப்பீரே ஒய்ந்தன்று -தக்கதாய்

ஏழுநாளும் கர்த்தருக்கு வன்பலி யிட்டிடுவீர்
ஏழாம்நாள் கூடிடுவீர் ஓர்சபையாய் -ஏழாம்நாள்

செய்யாதீர் எவ்வேலை சீர்மக்காள் ஓய்ந்திருப்பீர்
மெய்யார் பகன்றார் சிறந்து

38
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

அறுவடை திருநாளும் பெந்தகொசுதே திருவிழாவும்

அறுவடை செய்யும் பயிர்களில் நன்றாய்
அறுத்த முதற்கட்டை ஆசன் -சிறப்பாய்

அசைவாட்டக் கொண்டுவாரீர் மக்களே மற்றும்
அசைக்குமந் நாளில் பலியும் -திசையில்

அறுவடை செய்த பயிரை அசைத்து
சிறப்பாய் படைக்காது உண்ணீர் -அறுவடை

இச்சட்டம் உங்களுக்கு நாளும் நியமமே
எச்சரித்தார் தேவன் இறைவனார் -அச்சீர்

அறுவடை செய்தப் பயிரசை நாளாம்
சிறப்பான ஞாயிறு; பின்னே -நிறைவாக

போகட்டும் ஏழுவாரம்; ஐம்பதாம் நாளிலே
ஆகட்டும் மற்றும் பலிகொடு -தேசத்தில்

ஐம்பதாம் நாளதில் பெந்தகொசுத் நாளாமே
ஐம்பதாம் நாளதில் ஓய்ந்திருப்பீர் -ஐம்பதாம்

நாளதில் கொண்டு கொடுப்பீர் பயிர்களை
வேளையில் செய்வீர் பலிதந்து -கோளதில்

பெந்தகொசுத் நாளில் திருச்சபைக் கூடியே
இந்நாளில் நன்றாய் விளைப்பயிர் -தந்தவரை

தூயவர் கர்த்தர் துதிப்பீரே; இச்சட்டம்
ஓயா தலைமுறை யார்ச்சட்டம் -தேய

அறுவடை செய்யும் வயலின் வரப்பு
அறுவடை செய்யீர் கடைத்து -அறுவடை

ஏழை, வழிச்செல்வோர் உண்ண விடுவீரே
வேழார் பகன்றார் விதி

39
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

கூடாரப் பண்டிகை

நற்றிங்கள் ஏழில் முதல்நாள் சிறப்பாமே
நற்றவர் ஏற்றித் தொழுதிட -கற்க

திருச்சபைக் கூட்டமும் ஓய்வுநாள் ஆக
திருநேரம் எக்காளம் ஊது -திருநாள்

நினைவூட்டும் நேரத்தில் எக்காளம் ஊதி
நினைவாக வன்பலி இட்டு -நினைவில்கொள்

அந்நாளில் எவ்வேலை செய்யாதே ஓய்ந்திருப்பீர்
எந்நாளும் செய்வீர் விதியது -அந்தபடி

நற்றிங்கள் ஏழதில் பத்தாம்நாள் பாவபலி
நற்றவர்முன் செய்திட வந்திடுவீர் -கற்க

திருச்சபைக் கூடி புசியாதே நோன்பு
திருமக்காள் செய்வீர் சிறந்து -திருமக்கள்

அந்நாளில் யாருமே ஊன்புசிக்கல் ஆகாது
அந்நாளில் யாரும் புசித்திட்டால் -அந்தாளும்

போவான் அழிந்து; சிறப்பான நாளதுவாய்
நீவீர் புரிவீரே ஓய்வுநாள் -தீவிர

நற்றிங்கள் ஏழில் பதினைந்தாம் நாள்முதல்
நற்றவரை போற்றித் துதித்திட -நற்றாரே

கூடார நல்விழா ஏழுநாள் கொண்டாடும்
கூடாரம் தன்னில் வசித்திடுவீர் -மேடைசேர்

காரையொடு கல்சேர்த்து வீடிருந்தும் அந்நாளில்
சீரில்லாக் கூடாரம் தன்னில்வாழ் -சீரில்லா

வாழ்க்கையை வாழ்ந்தீர் திருப்பயணம் போதுநீர்
வாழ்க்கையை செய்வீர் நினைவாக -வாழ்நல்

தலைமுறைகள் ஏனிந்த பண்டிகை கேட்டால்
தலைமுறையே ஆன்றோர் பயணம் -தலைமுறையார்

செய்தார்; நினைவாய் இறைவன் அருளினார்
செய்திடுவோம் கூட விழா

40
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
இடித்துப் பிழிந்த ஒலிவநெய் தன்னை
இடித்துப் பிழிந்தது தூயாய் -அடியார்

அணையா தெரிய விடவே இரவில்
பணியார் திருவினது வீட்டில் -பணியாராம்

நன்மக்கள் ஆரோன் திருவின் திரைமுன்னே
பொன்விளக்கை ஏற்றச்சொல் ஞாவிழச் -நன்றாய்

அணையாது நல்லெண்ணெய் ஊற்றி எரிய
மணிவிளக்கு காலை வரைதான் -மணியாம்

பசும்பொன்னால் செய்த திருவிளக்கை ஏற்றி
விசுப்பலகை மேலே உணவும் -அசையாத

நேமம் பகன்றிடுவாய்; அப்பம் இருவரிசை
நேமம் உரைத்தார் இறைவனார் -நேமம்

புசிக்கட்டும் நல்லறையில் நேராண்கள் மட்டு,
புசிக்கலாகா மற்றோர் அதிலே -விசுப்பலகை

மேற்படைத்த அப்பமெந் நாளுமே ஆரோனின்
நாற்றவர்க்கு சொந்தம் அறி

41
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
இசுரேல் இனத்தாள் வெளியாண் மணந்தாள்
இசுரேல் இனத்தோடு சென்றாள் -இசுரேல்

குணமில்லா வித்தாம் மகன்வளர்க்க சேறாய்
குணமில்லோன் போனான் அழன்று -குணத்தோர்

இனத்தார் மலைக்கீழே நின்றிருக்க ஆங்கே
இனத்தாருள் மாந்தருக்குள் சண்டை -இனத்தாருள்

சண்டையிலே கர்த்தர் பெயர்தனை சீரில்லோன்
வண்மையாய் பேசத் துணிந்திட -சண்டையிடம்

கேட்டோரோ தன்செவியில் வீழ்ந்த இடிபோலே
கேட்டவர் போனார் மலைத்தங்கு -நாட்டான்

வசைப்பாட்டு கேட்டோர் சிறைப்பிடித்தார் மாந்தன்
வசைசெய்தோன் நேரோர் நிறுத்த -வசைக்கென

என்செய்ய என்றே திருச்சொல் எதிர்ப்பார்த்து
நின்றார் திருமக்கள் ஆங்குத்தான் -நின்றோர்

திருவும் திரையினின்று சொன்னார் திருச்சொல்
திருமக்கள் தன்னில் வசைசொல் -திருவில்லா

மாந்தனை சீர்முகாம் விட்டுப்போய் கேட்டோரை
மாந்தலை கைவைக்கச் சொல்வாய்நீ -மாந்தனை

கல்லெரிந்துக் கொல்வீரே நாகாக்கா மாந்தனை
கல்வியாய் மக்கள்முன் சாகட்டும் -கல்லெரிவீர்

யாரேனும் கர்த்தர் பெயரை வசைசெய்தால்
சீரே இதுநேமம் என்றாரே -சீரவர்

சொல்கேட்டு மோசே இனத்தா ரிடம்சொல்ல
சொல்படியே மக்கள் வசைந்தோனைக் -கல்லெறிய

நேர்நேமம் செய்தனர் சீனாய் மலைக்கீழே
சீர்மக்கள் சீராய் சிறந்து

42
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

ஏழாண்டில் ஓய்வும், யூபிலி ஆண்டில் விடுதலையும்

சீனாய் மலையிலே மோசே யிடம்கர்த்தர்
தேனோடும் தேசத்தில் சேர்ந்திடும்போ -வானார்சொல்

கேள்மின் புவியது ஏழாம் திருவாண்டில்
வேள்சொல் படியிரும் ஓய்ந்திரு -நாள்போல்

களத்திலே ஆறாண்டு சேர்ப்பயிர் ஆனால்
களம்விடும் ஓய்வாக ஏழில் -களத்திலே

தானாய் விளைந்ததை ஏழை புசிக்கவிடு
வானார் பகன்றோய்வு ஏழிலே -மேனோர்

களத்தில் பயிரிடாதுப் போவீர் கழிக்கா
வளத்தை பெருக்கவே செய்வீர் -களத்தில்

வளர்ந்த பயிரதை உண்ணலாம் மாக்கள்
களவேலை ஆளோடு சேர்த்து -களம்விதைக்கா

என்திண்போம் ஓய்வாண்டில் என்கேட்டால் ஆறிலே
நன்றாய் பயிராகும் நன்னிலமே -நன்றே

விளைச்சலது மூன்றாண்டு உண்ண வளமாய்
விளைந்திடும் நன்னிலம் கேள்

43
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
ஓய்வாண்டு ஆறு கழிந்தப்பின் ஏழது
ஓய்வாண்டில் எக்காளம் ஊதிடுங்கள் -ஓய்வாண்டின்

பின்வரும் ஐம்பதாம் ஆண்டோ திருத்தூயாய்
என்று மிருக்கும் சிறந்தங்கு -நன்றாமே

ஐம்பதாம் ஆண்டது யூபிலிப் பொன்னாண்டு
ஐம்பதாம் ஆண்டில் விதைக்காது -ஐம்பதாம்

ஆண்டில் விடுதலை செய்வீர் அடிமைகள்
ஆண்டுவர எல்லார் விடுத்திடுவீர் -ஆண்டில்

நிலம்விற்றால் யூபிலியின் பின்வரும் ஆண்டு
நிலத்தின் பலன்பார்த்து விற்பாய் -நிலமது

யூபிலியில் மீட்க விடுதலை யாகும்கேள்
யூபிலியில் சொந்தம் நிலமாகும் -யூபிலிமுன்

சோதரன் ஏழையாய் காணியை விற்றாலே
சோதரன் தன்னின் இனத்தானோ -சோதரனின்

காணியை மீட்டிடலாம்; ஆனாலும் யூபிலியில்
காணியது சொந்தமாகும் கேள்மின்னே -காணீரோ

நாடோடி மக்களே எந்தன் புறக்குடியே
நாடதில் மீட்காது விற்காதீர் -வீடோ

மதில்சூழ் நகரத்தில் விற்றாலோ ஆண்டில்
அதனை புரிவீரே மீட்பு -மதிலுள்

நகர்வீட்டை ஆண்டிற்குள் மீட்கா விடுத்தால்
நகர்வீட்டை கொண்டான்கை போகும் -நகரது

லேவியர் தன்னின் நகரென்றால் எந்நேரம்
லேவியர் மீட்கலாம் வீட்டைதான் -சேவிப்போர்

மீட்காத லேவியர் வீடது யூபிலியில்
மீட்காமல் சேர்ந்திடும் சொந்தமாய் -நாட்டிலே

லேவியர் வாழ்நகர் தன்னில் வெளிவயல்
மேவாது விற்காதீர் நன்று

44
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
வட்டிப் பொலிசைகள் சோதரன் கையிலே
தட்டிப் பறிக்காதீர் மக்களே -கெட்டு

விலைப்பட வந்தாலும் சோதரனை எட்டி
விலையாள்போல் செய்யாதீர் என்றும் -நலமாய்

இறைவனார்க்கு அஞ்சி நடப்பீர் இனத்தார்
இறையே எகிப்தினின்று சேர்த்தார் -இறைவனின்

ஊழியரே நீர்மக்காள் சீராய் நடப்பீரே
ஊழியர்காள் நற்கீழ் படிந்திருப்பீர் -ஏழையாய்

சோதரன் அந்நியனின் கீழ்வேலை போனாலும்
சோதரனை மீட்பீர் பணங்கொடுத்து -சோதரன்

மீட்காமல் போனாலும் யூபிலியில் மீள்வானே
நாட்டுள்ளே போகட்டும் தன்வீடு -நாட்டுள்ளே

அந்நியர்க்கும் நேமம் பொருந்தும் நிலையாக
எந்நாளும் சொல்வீர் இது

45
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

கற்பனைகள் கீழ்படிந்தால் வரும் நன்மைகள்

சொல்படியே மக்களே எவ்வுருவோ கற்சிலையோ
அல்லாகிச் செய்யாதீர் தேசத்தில் -நல்லவராய்

ஓய்வுநாட்கள் தன்னைநீர் கைக்கொண்டு கற்பனைகள்
தேய்ந்திடாக் கைகொள்வீர் நேர்மக்காள் -ஆய்தேசம்

சேர்தேசம் தன்னிலே மக்களும் நேராக
நேர்கர்த்தர் சொன்ன படிதானே -நேர்நடந்தால்

சேர்தேசம் தன்னிலே சீராய் மழைபொழியும்
வேர்மரமும் நன்றாய் கனிதரும் -சீராம்

நலநெல் அறுத்துப்போர்க் காலம் வரையில்
நலதிராட்சை சாறெடுப்பீர் போலே -நலச்சாறு

தன்னை பறிப்பீர் விதைக்கும் நிலகாலம்
என்றும் கொழிக்கும் வளம்தானே -நன்றாய்

அமைதியாய் தங்குவீர் தேசத்தில் மக்கள்
அமைதி குலைக்கும் விலங்கோ -அமைந்திருக்கும்

காட்டில்; வரமாட்டார் மற்றப் படைகளும்
நாட்டின்மேல் போரெடுத்து ஆங்குத்தான் -வேட்டப்

பகைஞர் தனையோ விரட்டுவீர் மக்கள்
பகைநூறென் ஐவர் விரட்ட -பகைஞரோ

பத்தா யிரமெனில் நூறால் விரட்டுவீர்
அத்துனை மேன்மை பலம்தானே -அத்தவரும்

கண்ணோக்கம் உங்கள்மேல் கொண்டிருந்து உங்களுக்கு
கண்ணாக சந்ததியார் வந்திடுவர் -மண்ணில்

அறுத்த மணிகள் மிகுதியென நீரும்
அறுவடை தன்னில் விலக்க -சிறப்பாய்

நடுவே உலாவும் திருக்கர்த்தர் நானே
நடுவிட்டுச் செல்லமாட்டேன் நன்றே -நடந்தாலே

உங்களின் தேவனாக நானிருப்பேன் நல்லோரே
தங்குவீர் தேசம் சிறந்துநீர் -மங்கி

அடிமைகளாய் கூனிக் குறுகி வளைத்த
அடிநுகத்தை நானே உடைத்தேன் -அடிநுகம்

வெட்டி உடைத்தப்பின் நல்லார் நிமிரச்செய்
நட்டாரே எந்தன் இனம்

46
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

இறைச்சொல் கீழ்ப்படியாமையின் தண்டனைகள்

கற்பனைகள் கைக்கொள்ளா மீறினால் தண்டனை
கற்பிப்பார் கர்த்தர் இறைவனார் -நெற்பயிர்

நீர்விதைக்க அந்தோ பகைஞரதை உண்பாரே
நீர்ப்போகும் ஆளுமையும் நோய்வரும் -தூர்க்கங்கு

மேலும் மனந்திரும்பா மக்களை தேவன்யான்
மேலேழு தண்டனை தந்திட -சீல

மரங்கள் கனிகொடாப் போகும் விருதா
சரமழை போகுமே பொய்த்து -பெருமை

நகரம் அழிந்திடும் நெல்மணி வீழும்
நகரில் வனமிருகம் வந்து -நகரத்தின்

சாலை தனில்நடக்க அஞ்சிடுவீர் மக்களே
சீலோர் இலையோசை அஞ்சுவீர் -காலாரே

மேலும் மனந்திரும்பா மக்களை தேவன்யான்
மேலேழு தண்டனை தந்திட -காலத்தே

ஊண்வாரா; பத்துப்பெண் ஓரடுப்பில் செய்திட
ஊண்உண்டும் போவீர் பசித்தங்கு -வீண்மக்காள்

போர்வரும் உம்மேலே ஓடுவீர் மேன்நகரம்
போர்தப்பி வந்தோரை நோயது -சீர்குலைந்தே

மக்களை ஊணாக உண்பீர் இனத்தாரே
தக்காது போவீர் பசித்தங்கு -தக்காரே

சீர்கர்த்தர் உம்மெதிராய் போனதால் மக்களே
நீர்தவறை உய்த்துணர்ந்தால் நன்றாமே -நேர்தப்பி

செய்பாவம்; முன்னோரின் பாவம் அறிக்கையிட
செய்யொப்பந் தங்கள் நினைந்து

47
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

பொருத்தனை, மீட்பு மற்றும் தசமபாகம் குறித்த சட்டங்கள்

இனத்தார் பொருத்தனை செய்தால் மகவை
இனமக்கள் வெள்ளி நயமாய் –மனையினின்று

கொண்டுவரச் சொல்வாய்நீ ஈடாக; தூயறை
கொண்ட எடையது சீர்தன்னே -அண்டி

வயது இருபது தன்னறு பத்து
வயது வரைஆண் மகவென் –நயமான

வெள்ளியில் ஐம்பது சேக்கல் கொடுக்கச்சொல்
வெள்ளியது முப்பதே பெண்ணென்றால் -ஒள்ள

வயதது ஐந்து இருபது ஆக
வயது வரைஆண் மகவென் –நயமான

வெள்ளி இருபது சேக்கல் கொடுக்கச்சொல்
வெள்ளியது பத்தெனப் பெண்ணென்றால் -ஒள்ள

வயது ஒருமாதம் ஐந்தாண்டு பிள்ளை
வயது வரைஆண் மகவென் –நயமான

வெள்ளியது ஐந்தாகச் சேக்கல் கொடுக்கச்சொல்
வெள்ளியது மூன்றெனப் பெண்ணென்றால் -ஒள்ள

வயது அறுபது மேலாண் எனிலே
நயமான வெள்ளி எடையும் –வயதாண்

பதினைந்தும் பெண்ணென்றால் பத்தும் கொடுக்க
இதுவே பொருத்தனை ஈடு -இதனைச்

செலுத்த முடியா வறியோன் வரச்சொல்
செலுத்த முடியும் பணத்தை –நிலைநேராண்

செய்யட்டும் தீர்வு; அதன்படி தந்திடச்சொல்
செய்யாகா ஏழை தனையங்கு -செய்தால்

மிருகம் பொருத்தனை தன்னை அதுதூய்
மிருகத்தை மாற்றிக் கொடுத்தல் -மிருகம்

நலமோ குறையோ அதுவே தரச்சொல்
இலையென் இரண்டுமே தூய்தான் -நலமில்

பலிதகா மாக்கள் தனையோ அலகிற்
பலிதரும் ஆசன் நிறுத்த -பலிதகா

மாக்கள் அலகிட்டுச் சொல்ல மனமிருந்தால்
மாக்களை கொள்ளலாம் ஈடாக -வாக்காக

வீடு இறைவனுக்கு தூயென நேர்ந்தாலே
வீடதை ஆசன் அலகிட்டு -வீடின்

நலங்குறை பார்ச்சொல்ல மீள்மனதென் மேலாய்
நலபொன்னைந் தில்லொரு பங்கு -நலமாய்

விதைக்கும் வயலை இறைவனுக்கு நேர்ந்தால்
விதைக்கும் வயல்கணக்கு செய்வீர் -விதைக்கலம்

வெள்ளியெடை ஐம்பது சேக்கலாய் தூயெடை
வெள்ளியைத் தந்திடச் சொல்வாய்நீ -ஒள்ளதாய்

யூபிலியின் ஆண்டுமுதல் நேர்ந்தால் கணக்கிட்டு
யூபிலியின் ஆண்டுவரை செய்கணக்கு -யூபிலியின்

பின்னரவன் நேர்ந்தால் சரியாய் கணக்கிடட்டும்
நன்றாசன் தீர்த்த நலமதிப்பு -நன்றாய்

வயலை இனத்தான் தனதின்கை மீட்க
நயமனதென் றாலே, இனத்தான் -வயலின்

தொகையினது மேலாக ஐந்திலோர் பங்கு
தொகைச்செலுத்தி செய்யட்டும் மீட்பு -தொகையது

யூபிலியின் முன்நேர் வயல்விற்றால் அந்நிலம்
யூபிலியில் ஆசரியன் சொந்தமாகும் -யூபிலியில்

மீட்கா நிலமது சாபமே கேள்மின்னே
ஆட்களின் கைக்கொடா தீர்மக்காள் -நாட்டிலே

கொண்ட வயல்தன்னை தூயென நேர்ந்தாலே
கொண்ட வயலது யூபிலியில் -கொண்டோன்

விடுத்தந்த காணி நலச்சொந்தம் சேர
விடுத்திடும் மக்களே நேராய் -அடையின்

தலையீற்று கர்த்தரின் சொந்தம் அதனால்
தலையீற்றை நேர்ந்திட வேண்டாம் -தலையீற்று

ஆடோ நலமாடோ நேர்ந்திட லாகாது
நாடுள் நலஞ்சேர்ந்தப் பின்னர் -அடையின்

தலையீற்று தூயில்லா மாக்களென்றால் மீட்க
தலையீற்றை ஆசன்முன் காட்ட -தலையீற்றை

பார்த்து மதிப்பிட ஐந்திலோர் பங்கைமேல்
சேர்த்துக் கொடுத்தாலே மீட்கலாம் -நேர்மக்கள்

மீட்கலாகா காணிக்கை ஏதேனும் நேர்ந்தாலே
மீட்கலாகா எல்லாம் இறைச்சொந்தம் -மீட்கலாகா

காணிக்கை மாந்தனை நேர்ந்தாலோ மாந்தனை
வீணனைக் கொன்றிடச் சொல்வாயே -காணிநிலம்

தேச நிலத்தின் அறுப்பில் மரக்கனியில்
வீசையாய் பத்திலோர் பங்கது -நேச

இறைவனின் பங்காமே; மீட்கவோ பங்கில்
நிறையைந்தி லோர்ப்பங்கு சேர்த்து -சிறப்பான

ஆடோ நலமாடோ பத்திலோர் பங்கது
நாடில் இறைவனின் பங்காமே -ஆடுமாடு

நன்றோ இலையோ எடுக்காதீர் பங்கதில்
அன்றெடுத்தால் ஈருமே தூயாகும் -நன்றாய்

இவைதன்னே சீனாய் மலைமீது மோசே
செவிகேட்க நல்லார் இறைவன் -புவிமேல்

இனத்தாருக் கென்று கொடுத்திட்ட சட்டம்
இனத்தார் செவிமடுக்கச் சொல்

48
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

லேவியர்நூல் முற்றிற்று

--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

Comments

Popular posts from this blog